திருமணமான மூன்றே நாளில் தூக்கில் தொங்கிய புதுமாப்பிள்ளை: அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Thursday,September 10 2020]

திருமணமான மூன்று நாளில் புதுமாப்பிள்ளை ஒருவர் தூக்கில் தொங்கியதால் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை பேரூர் என்ற பகுதியைச் சேர்ந்த வெல்டிங் ஒர்க் ஷாப் உரிமையாளர் கோவிந்தராஜ் என்பவர் மஞ்சுளா என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி சமீபத்தில் அவர் காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் திருமணமாகி மூன்றே நாட்களில் மஞ்சுளாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் கோவிந்தராஜ் மற்றும் மஞ்சுளாவை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். அங்கு பெற்றோரின் மூளைச் சலவைக்கு மயங்கிய மஞ்சுளா, கோவிந்தராஜனை பிரிய சம்மதித்து இனிமேல் கணவருடன் வாழ விருப்பமில்லை என்றும் காவல் நிலையத்தில் எழுதிக் கொடுத்துவிட்டு பெற்றோரிடம் சென்று விட்டார்.

பெற்றோர் பேச்சை கேட்டு காதல் மனைவி தன்னை விட்டு பிரிந்ததால் மனம் உடைந்த கோவிந்தராஜ், காவல்நிலையத்தில் இருந்து நேராக வீட்டிற்குச் சென்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனது மகனின் தற்கொலைக்கு காரணம் மஞ்சுளாவின் பெற்றோர்கள் என்றும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றும் கோவிந்தராஜன் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருமணமான மூன்றே நாட்களில் காதல் மனைவியை தன்னுடன் வாழ விருப்பமில்லை என்று காவல் நிலையத்தில் எழுதிக்கொடுத்து சென்றதால் ஏற்பட்ட விரக்தியில் புதுமாப்பிள்ளை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

More News

திருமணத்தால் விலகிய விஜய்சேதுபதி பட நாயகி: இடத்தை பிடித்த மேகா ஆகாஷ்!

திருமணம் காரணமாக ஒப்பந்தமாகி இருந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி பட நாயகி விலகியதை அடுத்து அந்த படத்தின் வாய்ப்பை நடிகை மேகா ஆகாஷ் கைப்பற்றிய தகவல் தற்போது வந்துள்ளது

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் விஜய்சேதுபதி பட இயக்குனரின் அடுத்த படம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதும், வரும் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகள் திறக்கப்படும்

இயக்குனர் சசியின் அடுத்த படத்தில் பிக்பாஸ் ஹீரோ!

இயக்குனர் சசி இயக்கவுள்ள அடுத்த படத்தில் பிக்பாஸ் போட்டியாளர் நடிக்கவிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது 

ஜிவி பிரகாஷ் - தனுஷ் கூட்டணியில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்!

கோலிவுட் திரையுலகின் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் முதல் சர்வதேச ஆங்கில ஆல்பம் தயாராகி கொண்டு வருகிறது என்பதும்,

சுஷாந்த் உயிருடன் இருந்தால் இந்நேரம் ஜெயிலில் இருந்திருப்பார்: தனுஷ் நாயகியின் அதிர்ச்சி டுவீட்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு தற்போது போதைப்பொருள் வழக்காக மாறி வருவது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.