வழுக்கைத்தலை மாப்பிள்ளையா? மணமேடையை விட்டு திடீரென எழுந்து ஓடிய மணமகள்

  • IndiaGlitz, [Saturday,March 03 2018]

இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு தற்போது வழுக்கைத்தலை என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. இளைஞர்களின் இந்த பலவீனத்தை பலமாக பயன்படுத்தி பலர் வழுக்கைத்தலையில் முடிநடும் நிலையங்களை தொடங்கி லட்சக்கணக்கில் பணம் கறந்து வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த டாக்டர் ரவிகுமார் என்பவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணப்பெண் தனது வருங்கால கணவரை போட்டோவில் பார்த்து திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் திருமண நிகழ்ச்சி மகிழ்ச்சிகரமாக நடந்து கொண்டிருந்தது மாப்பிள்ளை ரவிகுமார் தனது குடும்ப வழக்கப்படும் தலைப்பாகை அணிந்திருந்தார்.

இந்த நிலையில் மணப்பெண்ணுக்கு தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் மாப்பிள்ளை தலைப்பாகையை கழட்ட, அப்போதுதான் அவருக்கு முடி இல்லாததை கண்டு மணமகள் அதிர்ச்சி அடைந்தார். உடனே திருமண மேடையை விட்டு எழுந்து, முடியில்லாத இவரை திருமணம் செய்ய மாட்டேன்' என்று கூறிவிட்டு ஆவேசமாக திருமண மண்டபத்தை விட்டு வெளியேறினார்.

அனைத்து ஏற்பாடுகளும் செய்த பின்னர் திருமணம் நின்றுவிட்டதை எண்ணி அதிர்ச்சி அடைந்த டாக்டர் ரவிகுமார், பின்னர் அதே திருமணத்திற்கு பார்வையாளராக வந்த காய்கறி விற்பவரின் மகளை திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

ஜோதிகாவின் ரீமேக் படத்தில் இணைந்த சூப்பர் ஸ்டாரின் மகள்

இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க பிரபல தெலுங்கு நடிகை லட்சுமிமஞ்சு இணைந்துள்ளர். இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன்பாபுவின் மகள் என்பது தெரிந்ததே.

விஸ்வரூபம் 2' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வரூபம் 2' படத்தின் டிரைலர் தயாராகிவிட்டதாகவும், எந்த நேரத்திலும் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும்

ரோல்லிங் சார்! கார்த்தியின் அடுத்த பட படப்பிடிப்பு தொடங்கியது

கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள “ கார்த்தி-17 “ திரைப்படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.

'வடசென்னை' குறித்து தனுஷின் முக்கிய அறிவிப்பு

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த கூட்டணி 'வடசென்னை திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது.

தமிழ் மக்களுக்கு நம்பிக்கை துரோகம்: விழித்தெழு என்று கூறிய கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் மதுரையில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்குவதற்கு முன்பே அவர் தமிழக அரசு பல துறைகளில் செயலற்று இருப்பதை தனது டுவிட்டரில் சுட்டிக்காட்டி வந்தார்.