வெற்றியை சென்னை ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்: பிராவோ

  • IndiaGlitz, [Sunday,April 08 2018]

நேற்று தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஓவரில் 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் பிராவோ, 30 பந்துகளில் 68 ரன்கள் அதிரடியாக அடித்ததே வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தது. அதேபோல் ஜாதவ் கடைசி ஓவரில் அடித்த ஒரு சிக்சரும், பவுண்டரியும் வெற்றியை உறுதி செய்தது

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியது குறித்து பிராவோ கூறியபோது, இந்த போட்டியில் கிடைத்த வெற்றி ஒரு சிறந்த வெற்றி. இந்த வெற்றியை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன். எங்கள் அணி என் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறது. அந்த நம்பிக்கையை காப்பாற்றியிருப்பதாக கருதுகிறேன். எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்திக் கொண்டேன். இது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று கூறினார்

வெற்றிக்க்கு பின்னர் தல தோனி கூறியதாவது: இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நங்கள் களமிறங்கியுள்ளோம். இந்த போட்டியை காண வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருந்தது. சரியான நேரத்தில் பிராவோ பொறுப்பை உணர்ந்து ஆடினார். நாங்கள் இன்னும் நன்றாக பேட்டிங் செய்திருக்க வேண்டும். இருப்பினும் எந்த ஒரு போட்டியிலும் நான் பாசிட்டிவ் விஷயங்களை மட்டுமே எடுத்து கொள்வேன். அதேபோல் இந்த போட்டியிலும் பிராவோ மற்றும் ஜாதவ் ஆட்டம் சிறப்பாக இருந்தது என்று கூறினார்.

More News

'காலா' படக்குழுவினர்களின் முடிவில் திடீர் மாற்றம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படம் சமீபத்தில் சென்சாரில் 'யூஏ' சான்றிதழ் பெற்றது என்பதை பார்த்தோம்.

சண்முகப்பாண்டியன் அடுத்த படத்தை இயக்கும் தேசிய விருது இயக்குனரின் உதவியாளர்

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திரையுலக வாரீசான சண்முகப்பாண்டியன் நடித்த 'மதுரவீரன்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வெற்றியை பெற்றது

நடிகர் சங்கத்தின் அறப்போராட்டம்: முதல் நபராக மேடையேறிய தளாபதி விஜய்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நடிகர் சங்கம் சார்பில் அடையாள அறப்போராட்டம் நடைபெறுகிறது.

இந்தியாவுக்கு மேலும் இரண்டு தங்கம்: அசத்தும் இந்திய வீராங்கனைகள்

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பூனம் யாதவ் என்ற வீராங்கனை பளுதூக்கும் பிரிவில் 69 கிலோ எடைப் பிரிவில் இன்று தங்கம் பெற்றுள்ளார். இவர் மொத்தம் 222 கிலோ தூக்கி தங்கப்பதக்கம் வென்று சாதித்துள்ளார்.

பளுதூக்கும் போட்டியில் மேலும் ஒரு தங்கம்: இந்தியா அசத்தல்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் போட்டியில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் இந்தியா தங்கம் பெற்றுவிடும்போல் தெரிகிறது.