தனது கனவை திரைப்படத்தில் நிறைவேற்றிய இயக்குனருக்கு ரஜினி வாழ்த்து!

  • IndiaGlitz, [Thursday,March 07 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் கனவு, இந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்பதுதான். குறைந்தபட்சம் தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்றும், அவ்வாறு இணைக்க அரசு முயற்சி செய்தால் அதற்காக ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளிக்க தயார் என்றும் ரஜினிகாந்த் கடந்த பல வருடங்களுக்கு முன்பே கூறியிருந்தார்.

இந்த நிலையில் நதிகளை இணைக்க இதுவரை எந்த அரசும் முயற்சிக்காத நிலையில் ரஜினியின் கனவை இயக்குனர் ஆர்.கண்ணன் தனது 'பூமராங்' படத்தில் நிறைவேற்றியுள்ளார். இந்த படத்தின் கதை நதிகளை இணைக்க ஹீரோ செய்யும் முயற்சிதான் என்பது இந்த படத்தின் டிரைலரில் இருந்து தெரிய வந்தது.

இந்த நிலையில் 'பூமராங்' படத்தின் இயக்குனர் ஆர்.கண்ணன் உள்பட படக்குழுவினர் இன்று ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். ரஜினிகாந்த் இந்த படத்தின் கதை குறித்து கேட்டறிந்து இந்த படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
 

More News

ஜிவி பிரகாஷ்-ரைசா படத்தின் வித்தியாசமான டைட்டில்!

ஒரு ஆண்டில் அதிக படங்களில் நடித்து கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவராக ஜிவி பிரகாஷ் நடித்த படங்கள் இவ்வருடம் அடுத்தடுத்து வெளிவரவுள்ள நிலையில்

சூர்யாவை அடுத்து சிம்புவுக்கு வில்லனாகும் ஆர்யா?

சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் 'காப்பான்' திரைப்படத்தில் ஆர்யா வில்லன் கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிம்பு நடிக்கும் படத்திலும் ஆர்யா வில்லனாக நடிக்க

எம்.ஜி.ஆர்-சிவாஜி இணைந்து நடித்த ஒரே படத்தின் நாயகி காலமானார்

மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகிய இருவரும் ஒரே காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்தாலும் இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் என்ற பெருமையை பெற்றது 'கூண்டுக்கிளி'

அதிக பேராசையால் அந்தரத்தில் தொங்கும் தேமுதிக

ஆரம்பத்தில் இருந்தே அதிமுக கூட்டணியில் இணைய விஜயகாந்தின் தேமுதிக முடிவெடுத்துவிட்டாலும், அதிமுக கூட்டணியில் கூடுதல் தொகுதியை பெற திமுகவிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

'பிச்சைக்காரன்' இயக்குனர் சசியின் அடுத்த பட டைட்டில் என்ன?

விஜய் ஆண்ட்னி நடிப்பில் இயக்குனர் சசி இயக்கிய 'பிச்சைக்காரன்' திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழை போலவே தெலுங்கிலும் இந்த படம் ரிலீஸ் ஆகி சாதனை வசூல் செய்தது