ஜெயம் ரவியின் 'பூலோகத்திற்கு விடிவு காலம் வருமா?

  • IndiaGlitz, [Sunday,September 06 2015]

ரோமியோ ஜூலியட்', 'சகலகலாவல்லவன்' மற்றும் 'தனி ஒருவன்' ஆகிய மூன்று படங்களை கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் என மூன்று மாதங்களில் வெளியிட்டு முன்னணி நடிகர்களின் வரிசையில் இடம்பிடித்துவிட்டார் ஜெயம் ரவி. அதிலும் 'தனி ஒருவன்' படத்தின் வெற்றி அவரை வேற லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டது.

ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா ஆகியோர்களின் மார்க்கெட் தற்போது உச்சத்தில் இருக்கும்போது மூன்று வருடங்களாக முடங்கி இருக்கும் 'பூலோகம்' தற்போது வெளியானால் கண்டிப்பாக படம் வெற்றி பெறும் என கூறப்படுகிறது. பேரண்மை படத்தின் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் கல்யாணகிருஷ்ணன் இயக்கிய படம், ஜெயம் ரவி-த்ரிஷா ஜோடியில் உருவான படம் என்பதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஃபைனான்ஸ் பிரச்சனையால் சிக்கிய காரணத்தால் இந்த படம் வெளிவரமுடியாமல் முடங்கியுள்ளது.

இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக இந்த படம் வெளிவர முடியாத நிலையில் உள்ளது. இதேபோல் முடங்கிக்கிடந்த பல படங்கள் ஒருசிலரின் முயற்சியால் சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளது. அதேபோல இந்த படத்திற்கும் ஒரு விடிவுகாலம் வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

More News

தமிழிலும் இந்தியிலும் பிசியான வடிவேலு நாயகி

வடிவேலு ஹீரோவாக நடித்த 'தெனாலிராமன்' படத்தில் நாயகியாக நடித்த நடிகை மீனாட்சி தீக்சித், சமீபத்தில் ஒரு தமிழ் படத்திலும், இந்தி படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.......

'ஜிந்தா' படத்தில் கார்த்திக் நடிக்கும் கேரக்டர்?

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'அனேகன்' படத்தில் வில்லனாக ரீ எண்ட்ரி ஆன கார்த்திக், சமீபத்தில் வைபவ் நடிக்கும் ஒரு புதிய படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.....

ஜீவாவை விட தனுஷ் பெட்டரா?

சமீபத்தில் ரிலீசான 'இது என்ன மாயம்' படத்தில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், அவருடைய நடிப்பு சிறப்பாக பேசப்பட்டது......

தமிழ் சினிமாவில் எந்த இயக்குனரும் தராத கிளைமாக்ஸ்- ஆதிக்

'டார்லிங்' வெற்றி படத்தை அடுத்து ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' திரைப்படம் வரும் 17ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தன்னுடைய முதல் படம் குறித்து ஒருசில விஷயங்களை மனம் திறந்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, ....

பாடகராகும் மற்றொரு பிரபல நடிகர்

கோலிவுட்டில் தற்போது நடிகர்கள் பாட்டு பாடுவதும், பாட்டு பாடும் பாடகர்கள் நடிக்க வருவதும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இளையதளபதி விஜய் முதல் பல நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் ஒரே ஒரு பாடலையாவது பாடும் வழக்கத்தை கொண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் மற்றொரு நடிகரும் பாடகராக விரும்பியுள்ளாராம்.....