அஜித்தை எடுத்து ஜெயம் ரவி பக்கம் திரும்பிய போனிகபூர்

  • IndiaGlitz, [Sunday,September 22 2019]

அமிதாபச்சன் நடித்த ’பிங்க்' என்ற சூப்பர் ஹிட் படத்தின் தமிழ் ரீமேக் படமான அஜித்தின் ’நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரித்த போனிகபூர், இந்த படத்தின் வெற்றியால் மேலும் சில படங்களை ரீமேக் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

முதல்கட்டமாக சமீபத்தில் வெளியான ஜெயம் ரவியின் 'கோமாளி’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் இருந்து போனிகபூர் பெற்றுள்ளதாகவும் இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அவரது மகன் அர்ஜுன் கபூர், ஜெயம் ரவி வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி மேலும் சில தமிழ் படங்களின் இந்தி ரீமேக்கையும், இந்தி படங்களின் தமிழ் ரீமேக்கையும் போனிகபூர் தயாரிக்க திட்டமிட்டிருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

’கோமாளி’ படத்தின் இந்தி ரீமேக் மட்டுமன்றி தெலுங்கு மற்றும் கன்னட ரீமேக் உரிமைக்கும் பலத்த போட்டி இருப்பதாகவும் முன்னணி தெலுங்கு மற்றும் கன்னட நடிகர்கள் இந்த படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 

More News

விஜய்க்கு முதல்வர் ஆசை வந்தால் அது தவறில்லை: பழ கருப்பையா

விஜய் உள்பட நடிகர்களுக்கு முதல்வர் ஆசை வந்தால் அது தவறில்லை என்று 'சர்கார்' படத்தில் நடித்தவரும் பழம்பெரும் அரசியல்வாதியுமான பழ கருப்பையா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

விஜய் என்ன சொன்னாலும் அவங்களுக்கு பிடிக்காது: உதயநிதி ஸ்டாலின் 

பேனர் கலாச்சாரம் குறித்தும், சுபஸ்ரீ விவகாரத்தில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் நடிகர் விஜய் சமீபத்தில் நடந்த 'பிகில்' படத்தின் ஆடியோ விழாவில் பேசியது

இணையத்தில் வைரலான மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாட வாய்ப்பு அளிக்கும் டி.இமான்

இணையதளங்களில் ஒரு சில மோசமான விஷயங்கள் இருந்தாலும் கோடிக்கணக்கான நல்ல விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. குறிப்பாக ஒருவரது திறமையை ஒரே நாளில் உலகமே அறியும் வகையில்

லாஸ்லியா பதிலை கலாய்த்த கமல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முகின் நேரடியாக இறுதி போட்டிக்கு தேர்வு பெற்ற நிலையில் இன்று யாரை தக்க வைப்பது, யார் வெளியேறுவது என்பதை கமல் அறிவிக்கவுள்ளார்.

வேலைக்கு சேர்ந்த முதல் நாளே ஐடி பெண் ஊழியர் மரணம் அடைந்தது எப்படி? அதிர்ச்சி தகவல்

சென்னை அம்பத்தூரில் ஹெச்.ஆர். பணியில் வேலைக்கு சேர்ந்த முதல் நாளே தனிதா ஜூலியஸ் என்ற இளம்பெண் எட்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது