மணிரத்னம் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! காரணம் என்ன?

  • IndiaGlitz, [Tuesday,October 02 2018]

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. சுமார் ரூ.30 கோடி ஓப்பனிங் வசூல் செய்த இந்த படம் வரும் ஆயுதபூஜை வரை வசூலை தொடர்ந்து தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கவில்லை என்றால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என மர்மநபர் ஒருவர் மணிரத்னம் அவர்களுக்கு தொலைபேசியில் மிரட்டியதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மணிரத்னம் அவர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது இது முதல்முறையல்ல. ஏற்கனவே கடந்த 1996ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் 'பம்பாய்' படம் வெளியானபோது இவரது அலுவலகத்தில் வெடிகுண்டு பார்சல் வந்ததும் அதில் நூலிழையில் அவர் உயிர் தப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

மேக்கிங் ஆஃப் '2.0' விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ இன்று காலை 11 மணிக்கு வெளியாகும்

வசூலில் மணிரத்னம் படம் செய்த சாதனை

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வியாழன் அன்று வெளியான 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

ஐஸ்வர்யா யாருக்கு மட்டும் இனிமையானவர்? காயத்ரி ரகுராம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ரன்னராக தேர்வு செய்யப்பட்ட ஐஸ்வர்யாவை பிக்பாஸ் முதல் சீசனின் போட்டியாளர்களில் ஒருவரான காயத்ரி ரகுராம் புகழ்ந்துள்ளார்.

ஐஸ்வர்யாவின் காதலர் கோபியின் அதிர்ச்சி கிரிமினல் பின்னணி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்வையளார்களின் ஒட்டு மொத்த அதிருப்தியையும் சம்பாதித்த ஒரே ஒரு போட்டியாளர் உண்டென்றால் அது ஐஸ்வர்யா

செக்க சிவந்த வானம்' 4 நாள் வசூல் சாதனை

மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டார்கள் நடித்த 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்றது.