கொரோனாவில் மீண்ட பாடகி கனிகாகபூரின் அதிரடி முடிவு!

கொரோனாவை பரப்பும் வகையில் நடந்து கொண்டதாக பாலிவுட் பாடகி கனிகாகபூர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ’உண்மையில் என்ன நடந்தது’ என்பது குறித்து கனிகாகபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரிவான விளக்கத்தை தந்திருந்தார்.

அதில் தான் யாருக்கும் கொரோனாவை பரப்பவில்லை என்றும் லண்டனில் இருந்து தான் மும்பை திரும்பிய போது விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை எதுவும் தொடங்கவில்லை என்றும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கொரோனாவில் இருந்து குணமாகி சமீபத்தில் வீடு திரும்பிய கனிகாகபூர், தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் நர்சுகளுக்கு தனது நன்றியையும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த கனிகாகபூர், பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்க முன்வந்து உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மாவை நன்கொடையாக தந்தால் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறைக்கு தற்போது வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த முறையால் கொரோனா பாதித்தவர்கள் விரைவில் குணமடைவதாக கூறப்படுவதால் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மாவை, பாதித்தவர்களுக்கு நன்கொடையாக வழங்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதனை அடுத்து தற்போது கொரோனாவில் இருந்து மீண்ட கனிகாகபூர், பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. லக்னோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவரது உடல் முழுபரிசோதனை செய்யப்படுவதாகவும் இதனை அடுத்து விரைவில் அவர் பிளாஸ்மாவை நன்கொடையாக தருவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More News

ஈரானில் தொழிற்சாலை எரி சாராயத்தை குடித்த சம்பவம்: இதுவரை 700 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !!!

கொரோனா பரவலின் ஆரம்பக் கட்டத்தில் ஆல்கஹாலை அருந்துவதன் மூலம் கொரோனாவை தடுக்க முடியும் என வதந்தி கிளம்பியது.

சென்னை சலூன் கடைக்காரருக்கு கொரோனா தொற்று: வாடிக்கையாளர்களுக்கு வலைவீச்சு

சென்னையில் சலூன் கடை வைத்திருந்த ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவரது வாடிக்கையாளர்களுக்கும் கொரொனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது

ரஜினி பாட்டுக்கு குத்தாட்டம்: போலீசை பார்த்ததும் பம்மி ஓடிய சாண்டி!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாட்டுக்கு லண்டன் மால் ஒன்றில் குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் போட்டியாளரும் டான்ஸ் மாஸ்டருமான சாண்டி, போலீசை பார்த்ததும் பம்மி ஓடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

இந்தியாவில் 29 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: ஊரடங்கையும் மீறி உயர்வதால் பரபரப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை நாள்தோறும் சுமார் ஆயிரம் வரை உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 29 ஆயிரத்தை

பரிட்சையில் பாஸ் ஆயிருங்க, போலீசை ஏமாத்தாதிங்க: வடிவேலு

கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை ஏற்கனவே தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள வைகைப்புயல் வடிவேலு தற்போது புதிய வீடியோ ஒன்றில்