ரஜினியின் '2.0' படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்

  • IndiaGlitz, [Saturday,June 16 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம் '2.0. இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளின் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் ஏற்கனவே துபாயில் நடந்த பிரமாண்டமான விழாவில் வெளியானது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் புதியதாக ஒரு 'பறவை' பாடல் ஒன்றை கம்போஸ் செய்துள்ளார். இந்த பாடலை பாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளரும், ராப் பாடகருமான கைலாஷ்கர் என்பவர் பாடியுள்ளார். இந்த தகவலை கைலாஷ்கர் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் 'பாகுபலி', 'உன் சமையல் அறையில்', 'ஆம்பள' உள்பட ஒருசில படங்களுக்காக பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த், அக்சய்குமார், எமி ஜாக்சன், சுதான்ஷி பாண்டே, அதுல் ஹூசைன், ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள '2.0' படத்தை லைகா நிறுவனம் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் 3D தொழில்நுட்பத்தில் தயாரித்து வருகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும்

More News

நடிகை அஞ்சலியின் த்ரில் பட டைட்டில் அறிவிப்பு

பிரபல நடிகை அஞ்சலி இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். அவருக்கு அவரது ரசிகர்களும், சக கலைஞர்களும் ஊடகங்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியின் போட்டியாளர்கள்?

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி நாளை முதல் தொலைக்காட்சியில் ஆக்கிரமிக்க உள்ள நிலையில் இப்போதைய மிகப்பெரிய கேள்வி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் யார் யார் ?என்பதுதான்.

நாங்க செஞ்ச தவற செஞ்சுடாதீங்க: 'பிக்பாஸ் 2' போட்டியாளர்களுக்கு சினேகன் அறிவுரை

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பிக்பாஸ் 2 நிகழ்ச்சி நாளை முதல் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார் என்பது

கமல் நன்றி சொல்ல வேண்டியது குமாரசாமிக்கு அல்ல: தமிழிசை

கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி காவிரியில் இருந்து தண்ணீரை திறந்துவிடாத காரணத்தால் தமிழக விவசாயிகளின் குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீரை மேட்டூர் அணையில்

அறிவியல் வளர்ந்த அளவு இதயம் வளரவில்லையே! நடிகர் விவேக் வேதனை

மகாராஷ்டிரா மாநிலத்தில் உயர் சாதியினருக்கு சொந்தமான கிணற்றில் குளித்த தலித் சிறுவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் குறித்த வீடியோ ஒன்று நேற்று பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது