close
Choose your channels

மும்பை ரெட்லைட் ஏரியாவுக்கு சென்ற பிரபல நடிகை: என்ன காரணம்?

Saturday, February 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை ஒருவர் மும்பையில் உள்ள ரெட் லைட் ஏரியாவுக்கு சென்று வந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகை ஆலியாபட். இவர் தற்போது நடித்து முடித்துள்ள ’கங்குபாய் கத்தியவாடி’ என்ற திரைப்படம் பிப்ரவரி 25ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது என்பதும் இதன் பிறகு இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் பாலியல் தொழிலாளி ஒருவர் அரசியலில் ஈடுபட்டதன் கதையம்சம் கொண்டது என்பதும் இந்தப் படத்தில் பாலியல் தொழிலாளியாகவும், அரசியல்வாதியாகவும் ஆலியா பட் நடித்துள்ளார்.

இந்த கேரக்டருக்காக மும்பையில் உள்ள ரெட் லைட் ஏரியாவில் சென்று பாலியல் தொழிலாளிகளுடன் ஆலியாபட் பழகியதாகவும் அவர்களது நடை உடை பாவனை மற்றும் சில அம்சங்களை கற்றுக் கொண்டதாகவும் அதனால் இந்த படத்தில் ஆலியா பட் தத்ரூபமாக நடித்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆலியா பட் நடிப்பில் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் அவர் நடித்த இன்னொரு படமான 'கங்குபாய் கத்தியவாடி’ பிப்ரவரி 25ஆம் தேதி வெளியாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment