ரஜினியுடன் கூட்டணி வைத்தால் நாசமாகிவிடும்: சுப்பிரமணியன் சுவாமி

  • IndiaGlitz, [Saturday,May 12 2018]

பாஜக மேலிடம் இன்று வரை ரஜினியுடன் கூட்டணி வைப்பதையே விரும்புவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகிய சுப்பிரமணியன் சுவாமி ஆரம்பம் முதலே ரஜினி, கமல் ஆகிய இருவரையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இவருடைய விமர்சனத்திற்கு கமல்ஹாசன் அவ்வப்போது பதிலடி கொடுத்தாலும் ரஜினி அமைதியாகவே உள்ளார்

இந்த நிலையில் சமீபத்தில் மோடியுடன் ரஜினிகாந்த் கூட்டணி வைத்தால்  அவர் முதல்வராகிவிடலாம் என துக்ளக் ஆசிரியர் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு தனது டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி நேற்று அளித்த பேட்டியில் மீண்டும் ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்தார்

நடிகர்கள் அரசியலில் சாதித்த காலம் மலையேறிவிட்டதாகவும், இனிமேல் வரும் நடிகர்கள் அரசியலில் சாதிக்க முடியாது என்றும் கூறிய சுப்பிரமணியன் சுவாமி, ரஜினி போன்ற படிப்பறிவில்லாதவர்களுடன் கூட்டணி வைத்தால் நாசம் ஏற்படும் என்றும் கூறியுள்ளார். சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

More News

கமலுக்கு சாவித்திரியின் பாராட்டும், சாவித்திரிக்கு கமலின் பாராட்டும்

உலகநாயகன் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக சாவித்திரி நடித்த 'களத்தூர் கண்ணம்மா' என்ற படத்தில் அறிமுகமானார் என்பதும், முதல் படத்திலேயே சிறப்பாக நடித்ததற்காக

நயன்தாராவுக்காக பாடலாசிரியராக மாறிய பிரபல நடிகர்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் படங்களில் ஒன்று 'கோலமாவு கோகிலா' என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே

இது ஆடுபுலி ஆட்டம் இல்ல! சண்டக்கோழி 2 டிரைலர் விமர்சனம்

விஷால், மீரா ஜாஸ்மின் நடித்த 'சண்டக்கோழி' படத்தின் இரண்டாம் பாகமான 'சண்டக்கோழி 2' திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகி விஷால் ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.

நானும் இதை சந்தித்துள்ளேன்: படுக்கை அழைப்பு குறித்து காலா நாயகி

கடந்த சில மாதங்களாக படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் குறித்து கோலிவுட் முதல் ஹாலிவுட் வரையில் உள்ள  நடிகைகள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

திருமண பேனர் வைப்பதில் தகராறு: வாலிபரை ஓட ஓட வெட்டி கொலை செய்த கும்பல்

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் திருமண போஸ்டர் ஒட்டும் தகராறு ஒன்றில் எட்டு பேர் கொண்ட கும்பல் ஒன்று இளைஞர் ஒருவரை ஓட ஓட வெட்டி கொலை செய்தனர்.