close
Choose your channels

'மாஸ்டர்' படப்பிடிப்புக்கு மீண்டும் வந்த சிக்கல்: கோலிவுட்டில் பரபரப்பு

Friday, February 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நெய்வேலியில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் நடைபெற்று வந்த நிலையில் திடீரென வருமான அதிகாரிகளால் விஜய் விசாரனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கப்படவில்லை என்றாலும் அதே சுரங்கத்தில் மற்ற காட்சிகள் படமாக்கப்பட்டது

இந்த நிலையில் வருமான வரி சோதனை முடிந்து இன்று மீண்டும் விஜய் ’மாஸ்டர்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இதனையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திடீரென ’மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் என்எல்சி சுரங்கம் முன்பு பாஜகவினர் போராட்டம் நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

என்எல்சி சுரங்கத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி தரக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம் நடத்துவதாகவும் அவர்களுடன் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் வீட்டில் ரெய்டு நடந்ததற்கு மத்திய அரசு காரணம் என அரசியல் விமர்சகர்களால் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் பாஜகவினர் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment