மெல்லிசான டிரான்ஸ்பிரண்ட் உடையில் விஜய் பட நாயகி… கோடிகளில் குவியும் லைக்ஸ்!

  • IndiaGlitz, [Monday,May 24 2021]

கடந்த 2002 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடித்த “தமிழன்” திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. பின்னர் பாலிவுட் சினிமாவில் கொடிக் கட்டிபறந்த இவர் தற்போது ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். மேலும கடந்த 2018 ஆம் ஆண்டு பாப் பாடகர் நிக் ஜோனாசை திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது சர்வதேச அளவில் கவனிக்கப்படும் ஒரு நட்சத்திரமாக வளர்ந்துள்ளார்.

இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவரோடு நேற்று இரவு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 2021 பில் ஃபோர்ட்டு மியூசிக் அவார்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் அணிந்து இருந்த உடை சர்வதேச அளவில் கவனம் பெற்று டிரெண்டாகி வருகிறது. பேஷன் விஷயத்தில் படு உற்சாகம் கொண்டவர் நடிகை பிரியங்கா. கேன்ஸ் திரைப்பட விழா, மெட்காலா நிகழ்ச்சிகளில் இவர் அணியும் உடைகள் ரெட் கார்பெட்டில் தனிக்கவனம் பெறும்.

அந்த வகையில் தற்போது பில் ஃபோர்ட்டு மியூசிக் அவார்ட் நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா அணிந்து இருந்த உடை படு டிரெண்டாகி வருகிறது. சில்வர் கலரில் படு டிரான்ஸ்பிரண்டான அந்த உடையைப் பார்த்து ரசிகர்கள் படு ஆச்சயர்த்தையும் வியப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் ரெட் கார்பெட்டில் வலம் வந்த பிரியங்கா தனது கணவர் நிக் ஜோனாசுடன் சேர்ந்து பல புகைப்படங்களை எடுத்துக் கொண்டுள்ளார்.

அதில் ஒரு புகைப்படம் அவர்களின் காதலை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்து இருந்தது. அந்தப் புகைப்படம் தற்போது இன்ஸ்டாவில் 2 கோடி லைக்குகளை பெற்று வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

More News

புதிதாக உருவான மஞ்சை பூஞ்சை தொற்று....!அறிகுறிகள் என்ன..? தடுப்பது எப்படி...?

கடும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய மஞ்சள்  பூஞ்சை  தொற்று என்ற புதிய நோய் உருவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

குளுகுளு PPE kid … கல்லூரி மாணவரின் அசத்தும் கண்டுபிடிப்பு!

கொரோனா நேரத்தில் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள்,

ஆபாச சேட்டை செய்த ஆசிரியர்....! தக்க பதிலடி கொடுத்த மாணவர்கள்...!

சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக, அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

முகம் காட்டாமல் உதவும் மாமனிதர்...! தூத்துக்குடியில் செழிக்கும் மனிதநேயம்....!

கொரோனா நோயால் உலகமே ஸ்தம்பித்து போயிருக்கிறது என்று சொல்லலாம். இக்கட்டான சூழலிலும்

ஆள் நடமாட்டமே இல்லாத எவரெஸ்ட்டிலும் கொரோனா? அதிர்ச்சி தகவல்!

உலகிலேயே மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என நேபாள அரசு தொடர்ந்து கூறிவருகிறது.