காதலித்ததால் ஆண் உறுப்பு அறுக்கப்பட்ட இளைஞர்… வன்முறையில் முடிந்த சம்பவம்!
- IndiaGlitz, [Monday,July 26 2021]
பீகார் மாநிலத்தில் தன் வீட்டு பெண்ணை காதலித்த 18 வயது இளைஞர் ஒருவரை ஆணுறுப்பை சிதைத்து கொலை செய்துள்ளனர். இதனால் கோபம் அடைந்த இளைஞரின் உறவினர்கள், இறந்த உடலை பெண் வீட்டிற்கு முன்பு வைத்து எரித்த சம்பவம் கடும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் அருகே உள்ள ரேபுரா ராம்பூர் எனும் கிராமத்தில் வசித்து வந்த இளைஞர் மணிஷ் டாகுர்(18). இவர் ஒடிசாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சமீபத்தில் தனது தங்கையின் திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்தத் தருணத்தில் மணிஷ் தனது காதலியை அடிக்கடி சந்தித்துள்ளார். இதனால் கடும் கோபமடைந்த பெண்ணின் வீட்டார் மணிஷை கடத்தி அவருடைய ஆணுறுப்பை சிதைத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
பின்னர் மணிஷின் உடலை அவருடைய வீட்டிற்கு முன்பு எறிந்துள்ளனர். இதனால் கடும் அதிர்ச்சியுற்ற மணிஷின் உறவினர்கள் இந்தக் கொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இறந்த மணிஷின் உடலை பெண்ணின் வீட்டிற்கு முன்பாக தீ வைத்து எரித்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் கடும் வன்முறை வெடித்துள்ளது. இதையடுத்து ரேபுரா ராம்பூர் கிராமத்தில் போலீசார் குவித்து வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.