மணிரத்னம் மீதான தேசத்துரோக வழக்கு: பீகார் போலீஸின் அதிரடி முடிவு

மணிரத்னம் உள்பட 49 திரையுலக பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய சமீபத்தில் பீகார் நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது இந்த வழக்கை பீகார் போலீசார் வாபஸ் பெற முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி 49 பேர் புகார் அளித்த வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்பட 49 இந்திய திரையுலக பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடந்த ஜுலை மாதம் எழுதிய கடிதத்தில் இந்தியாவில் மதம் என்ற பெயரில் நடந்து வரும் கும்பல் வன்முறைக்கு முடிவு கட்டுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் பீகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்பவர், பிரதமருக்கு கடிதம் எழுதி நாட்டின் நற்பெயரை கெடுப்பதோடு, பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் அடிப்படையில் 49 பேர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய பீகார் மாநில காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் 49 பேர் மீது புகார் அளித்த வழக்கறிஞர் தவறான தகவல்கள் அளித்ததை பீகார் காவல்துறை கண்டுபிடித்தது. இதனால் தேசத்துரோக வழக்கை வாபஸ் பெறுவது மட்டுமின்றி புகார் அளித்த வழக்கறிஞர் மீது காவல்துறை வழக்குத் தொடரும் என்று பீகார் மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். இதனையடுத்து மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

More News

தங்கர்பச்சான் அடுத்த படத்தின் டைட்டில்-ஃபர்ஸ்ட்லுக் குறித்த தகவல்!

பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் அவர்கள் தனது மகனை ஹீரோவாக்கி ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்றும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருவதாகவும்

சித்தார்த் நடித்த 'அருவம்' சென்சார் தகவல்கள்

சித்தார்த் நடித்த 'அருவம்' திரைப்படத்தின் புரமோஷன் வீடியோக்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன. குறிப்பாக உணவுக்கடைகள் சீல் வைக்கப்படும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

வனிதா வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சேரன் - லாஸ்லியா

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை எப்போதும் பரபரப்பாக வைத்திருந்தவர் வனிதா. மற்றவர்களை பேசவிடாமல் தான் மட்டுமே பேசிக்கொண்டிருந்தாலும் அவர் கூறுவதில் நியாயம் இருக்கும்

ரஜினி கட்சிக்கு செல்கிறாரா சினேகன்? அவரே அளித்த பதில்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், அக்கட்சியின் சார்பில் கடந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டவருமான

பிக்பாஸ் பைனலுக்கு ஏன் போகவில்லை: சரவணன் விளக்கம்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான சரவணன், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியதால் திடீரென பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்