ஒரே ஒரு ஸ்லோகன்: தாமரையை கதறி அழவைத்த பிரியங்கா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரே ஒரு ஸ்லோகனை சொல்லி தாமரையை கதறி அழ வைத்த பிரியங்காவின் செயல் குறித்த காட்சிகள் இன்றைய அடுத்த புரமோவில் உள்ளன.

பிக்பாஸ் வீட்டில் தற்போது அரசியல் மாநாடு என்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இதில் மூன்று அரசியல் கட்சியாக போட்டியாளர்கள் பிரிந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று வெளியான முந்தைய புரமோவில் தாமரை மற்றும் அபினய் ஆகிய இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் நடந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிரியங்கா தனது கட்சியின் சுலோகமாக ’தெரியல தெரியல என்று சொல்றீங்க’ ’நாடகம் நன்றாக ஆடுறீங்க’ என்று கூறுகிறார்.

இதில் நாடகம் என்ற வார்த்தையை பிரியங்கா கேலி செய்வதாகவும் தன்னை குறிப்பிட்டு தான் சொல்வதாகவும் நினைத்துக்கொள்ளும் தாமரை கதறி அழுகிறார். அவருக்கு ஆறுதல் கூற ராஜூ முற்பட்ட போது, ‘நாடகம் என்பது என்னுடைய தொழில், அதை நான் என்னால் விட்டுக்கொடுக்க முடியாது, நான் குழந்தைக்கு பால் கூட கொடுக்காமல் நாடகத்திற்கு போயிருக்கின்றேன். எனக்கு இந்த விளையாட்டே வேண்டாம், எனக்கு நாடகம் தான் முக்கியம்’ என்று கூறுகிறார்.

இந்த நிலையில் ’தெரியல தெரியல என்று சொல்றீங்க’ ’நாடகம் நன்றாக ஆடுறீங்க’என்பது எங்கள் கட்சியின் ஸ்லோகம் என்று கூறி பிரியங்கா சமாளிக்கின்றார். மொத்தத்தில் தாமரையை அடிக்க வேண்டிய இடத்தில் சரியான இடத்தில் அடித்து அவரை பிரியங்கா பின்னடையச் செய்து வருவதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பகுதியில் தெரிவித்து வருகின்றனர்.

More News

இந்தியாவின் லெஜண்ட் கிரிக்கெட்டர்கள் திடீர் சந்திப்பு… வைரலாகும் வீடியோ!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் இருவரும் சந்தித்துக் கொண்ட

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து… முப்படை தளபதி பிபின் ராவத் நிலை என்ன?‘

குன்னூர் அருகே இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இதுவரை 7

ஆரவ்-ராஹி: வைரலாகும் சுற்றுலா புகைப்படங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்து ஐந்தாவது சீசன் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனின் டைட்டில் வின்னர் ஆரவ் என்பது தெரிந்ததே 

தர்ஷனுடன் சபரிமலை யாத்திரை: கவின் வெளியிட்ட புகைப்படங்கள்!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகருமான கவின் தற்போது சபரிமலை யாத்திரை சென்று உள்ள நிலையில் அது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

ஏவிஎம் ஸ்டுடியோ அருகே அனாதையாக இறந்து கிடந்த விஜயகாந்த் பட இயக்குனர்!

விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் ஒருவர் சென்னை வடபழனி ஏவிஎம் ஸ்டூடியோ அருகே அனாதையாக இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது