பிக்பாஸ் அல்டிமேட்: இறுதி வாரத்தில் வெளியேற்றப்பட்ட முதல் போட்டியாளர்!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதும் இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்களும் அதன் பின் ஒருசில வைல்ட் கார்டு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே .

இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது. இறுதியாக இந்த நிகழ்ச்சியில் ஜூலி, ரம்யா பாண்டியன், அபிராமி, பாலாஜி, தாமரை மற்றும் நிரூப் ஆகிய ஆறு போட்டியாளர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த ஆறு போட்டியாளர்களில் இறுதி வாரத்தில் வெளியேறும் முதல் போட்டியாளர் குறித்த அறிவிப்பை பிக்பாஸ் வெளியிட்டுள்ளார். இதன்படி அபிராமி வெளியேறுவதாக பிக்பாஸ் அறிவித்ததும், அவர் கண்ணீருடன் சக போட்டியாளர்களிடம் விடைபெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதுகுறித்த காட்சிகளின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் மீதி உள்ள ஐவரில் பிக் பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர் யார் என்பதை இந்த வார இறுதியில் பொறுத்திருந்து பார்ப்போம்.