'பிக்பாஸ் தமிழ்' டைட்டில் வின்னர் ஆரவ்வுக்கு திருமணம்: மணப்பெண் நடிகையா?

  • IndiaGlitz, [Wednesday,August 26 2020]

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் டைட்டின் வின்னரான ஆரவ்வுக்கு திருமணம் என்ற செய்தி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆரவ் மற்றும் ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது காதலர்களாக இருந்தனர் என்பதும், ஓவியாவுக்கு ஆரவ் மருத்துவ முத்தம் கொடுத்தார் என்பதும் தெரிந்ததே. ஆனால் டிஆர்பிகாக ஆரவ்-ஓவியா காதல் குறித்த காட்சிகள் பிக்பாஸ் திரைக்கதை குழுவினர்களால் மிகைப்படுத்தப்படுத்தப்பட்டது என்றும், இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் ஓவியா அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் பிக்பாஸ் ஆரவ்வுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் மணப்பெண் நடிகை ராஹே என்றும் கூறப்படுகிறது. இவர் கௌதம் மேனன் இயக்கிய ’ஜோஷுவா இமைபோல் காக்க’ என்ற படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு காதல் திருமணம் என்றும் இந்த திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதித்து விட்டதாகவும் விரைவில் இந்த திருமணம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

நடிகை ஓவியா, ஆரவ்வை காதலிப்பதாக கூறப்பட்டாலும் அதில் உண்மை இல்லை என்றும் தனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றும் ஓவியா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய் உறவினர் சினேகா பிரிட்டோவின் திருமண புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல்

தளபதி விஜய்யின் மாமா மகளும் விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தின் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகாவுக்கும், நடிகர் அதர்வாவின் சகோதரர் ஆகாஷுக்கும்

சென்னை மாணவி லண்டனில் கடத்தப்பட்ட விவகாரம்!!! NIA விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!!

சென்னை ராயப்பேட்டையைச் சார்ந்த தொழிலாளர் ஒருவரின் மகள் லண்டனில் உயர்கல்வி பயின்று வந்தார்

வீடு முழுவதும் தகரத்தை வைத்துமூடி அத்துமீறல்… கொரோனா சிகிச்சை எடுத்துக் கொண்டதால் புறக்கணிப்பு!!!

சென்னை பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை பகுதியில் கொரோனா பாதித்த ஒருவரின் வீட்டுக் கதவு,

பார்சிலோனா அணியிலிருந்து விலக மெஸ்ஸி முடிவு: படு தோல்வி காரணமா?

கடந்த 20 ஆண்டுகளாக பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் உலகின் முன்னணி கால்பந்து வீரராக மெஸ்சி திடீரென பார்சிலோனா அணியிலிருந்து விலக முடிவு செய்திருப்பதாக

முதல்முறையாக அரசிடம் சோனுசூட் வைத்த வேண்டுகோள்: செவிசாய்க்குமா அரசு?

இந்த கொரனோ காலத்தில் பாலிவுட்டின் வில்லன் நடிகர் சோனு சூட், இந்திய மக்களின் ஹீரோவாக மனதில் பதிந்தார் என்பது தெரிந்ததே.