பிக்பாஸ் டாஸ்க்: முதலிடத்தை பிடித்த ஐஸ்வர்யா-யாஷிகா

  • IndiaGlitz, [Wednesday,September 19 2018]

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு நேற்று இரண்டு விதமான டாஸ்க் கொடுக்கப்பட்டது. முதல் டாஸ்க்கான பஸ்ஸர் மீது வைத்திருக்கும் கையை எடுக்க வைக்கும் டாஸ்க்கில் யாஷிகா, விஜயலட்சுமி தவிர மற்றவர்கள் தோல்வி அடைந்தனர். குறிப்பாக ரித்விகா, ஐஸ்வர்யா மற்றும் பாலாஜிக்கு மைனஸ் பாயிண்ட்டுக்கள் கிடைத்தது.

ஆனால் அதே நேரத்தில் அடுத்ததாக கொடுக்கப்பட்ட 'ஞாபகம் வருகிறதா' டாஸ்க்கில் ஐஸ்வர்யா அபாரமாக விளையாடினார். பிக்பாஸ் சொல்லும் கலர்களை சரியாக ஞாபகம் வைத்து எந்தவித டென்ஷனும் இல்லாமல் டான்ஸ் ஆடிக்கொண்டே சரியாக விளையாடியதால் அவருக்கு முழு மதிப்பெண்ணான 250 மதிப்பெண் கிடைத்தது. முதல் டாஸ்க்கில் அவர் -20 மதிப்பெண் வாங்கியிருந்ததால் அவரது மொத்த மதிப்பெண் 230ஆக மாறியது. அதேபோல் யாஷிகாவும் இரண்டு டாஸ்க்குகளில் 230 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தற்போது இருவரும் சம மதிப்பெண்களில் முதலிடத்தில் உள்ளனர்.

பிக்பாஸ் கலர்களின் பெயரை தமிழில் கூறியபோதும் தமிழ் சரியாக தெரியாத போட்டியாளர்களான ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் நன்றாக விளையாடியபோதிலும் தமிழ்ப்பெண்கள் இந்த டாஸ்க்கில் சொதப்பினார்கள். விஜயலட்சுமி, ஜனனி ஓரளவு சுமாராக விளையாடினாலும், ரித்விகா, பாலாஜி மிக மோசமாக விளையாடியதால் அவர்கள் இன்னும் மைனஸ் புள்ளிகளில் உள்ளனர்.

நேற்றைய டாஸ்க்கில் ஐஸ்வர்யாவை பார்த்து யாஷிகா காப்பியடித்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஐஸ்வர்யா நேர்மையாக விளையாடிய ஒரே டாஸ்க் இதுவாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஐஸ்வர்யா மீது பல்வேறு விமர்சனங்கள் வைத்தபோதிலும் அவரது ஞாபகசக்தி திறனை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும்.

More News

கமல் பாணியில் களமிறங்கும் விஷால்

நடிகர் சங்க பொதுச்செயலாளர் தேர்தலில் நிற்கும்போதும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடும்போது கமல்ஹாசனின் ஆதரவை பெற்ற நடிகர் விஷால் அவரது பாணியில் அரசியல் அமைப்பு

விஜயலட்சுமிக்கு ஓட்டுவேட்டையாட களமிறங்கிய பிரபல இயக்குனர்

பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டில் வந்தாலும் தற்போதைய போட்டியாளர்களில் போல்டாக இருப்பவர் விஜயலட்சுமிதான். யாரிடமும் வம்புக்கு போகாமல்

விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமாக உள்ள வெளிநாட்டு இளம்பெண் யார்? பரபரப்பு தகவல்

அர்ஜூன் ரெட்டி' என்ற ஒரே படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் புகழ் பெற்று அதற்கு அடுத்த படமான 'கீதா கோவிந்தம்' படத்தின் மூலம் ரூ.100 கிளப்பில் இணைந்த நடிகர் விஜய் தேவரகொண்டா.

கமல்ஹாசனின் டைட்டிலை பெற்ற வரலட்சுமி

கோலிவுட் திரையுலகில் தற்போது பிசியான நடிகையாக மட்டுமின்றி ஒரே நேரத்தில் அதிக படங்களில் நடித்து கொண்டிருக்கும் நடிகையாகவும் இருப்பவர் வரலட்சுமி சரத்குமார்.

பாமகவின் துணைத்தலைவராக பிரபல நடிகர் நியமனம்

நடிகர்கள் அரசியலுக்கு வருவதை தொடர்ந்து பல ஆண்டுகளாக எதிர்த்து வரும் அரசியல் கட்சியான பாமகவின் துணை தலைவராக நடிகர் ரஞ்சித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.