ஜோவிகாவின் 'போடா வாடா' உட்பட பல பஞ்சாயத்து.. கமல்ஹாசன் முடிவு என்ன? புரமோ வீடியோ..!

  • IndiaGlitz, [Saturday,October 14 2023]

பிக்பாஸ் வீடு இந்த வாரம் ரணகளமாக இருந்தது என்பதும், குறிப்பாக ஸ்மால் ஹவுஸ் மற்றும் பிக் ஹவுஸ் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து இரு துருவங்களாக மோதிக்கொண்டனர் என்பதும் அதனால் பிக் பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதையும் பார்த்தோம்.

குறிப்பாக பிரதீப் அந்தோணியை ஜோவிகா ’போடா வாடா’ என்று கூறியது, ’என்னை பார்த்து தகுதி இல்லை என்று எப்படி கூறலாம்' என பிரதீப் அந்தோணியை பார்த்து நிக்சன் கூறியது, மாயா - விசித்ரா இடையிலான பிரச்சனை உட்பட பல பிரச்சினைகள் இருப்பதால் இன்று கமல்ஹாசனுக்கு இந்த பஞ்சாயத்துக்களை தீர்க்கவே நேரம் சரியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் சுலபத்தில் தீர்வு கண்டுவிடும் கமல்ஹாசன் இன்றைய நிகழ்ச்சியிலும் சிலருக்கு கண்டனத்தையும் சிலருக்கு வாழ்த்துக்களையும் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்கள் ஸ்ட்ரைக் செய்ததை கமல் எப்படி அணுகப் போகிறார் என்பதை பார்க்க பார்வையாளர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர். மொத்தத்தில் இரண்டாவது வாரமே பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்துள்ளதால் பார்வையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியே.

More News

சூர்யாவுக்கு அடுத்த படத்தில் இந்த கேரக்டரா? பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் துள்ளும் இளமை..!

சூர்யாவின் அடுத்த திரைப்படமான 'சூர்யா 43' திரைப்படத்தை  சுதா கொங்கரா இயக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் இளமை துள்ளும் கல்லூரி மாணவன் கேரக்டரில்

ஜோதிகாவின் அடுத்த படம்.. ரிலீஸ் திட்டத்தில் திடீர் மாற்றம்..!

மம்முட்டி மற்றும் ஜோதிகா 13 ஆண்டுகளுக்குப் பின்னர் இணைந்து நடித்த 'காதல் - தி கோர்'  என்ற மலையாள திரைப்படம் முதலில் ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தை

முதல் 10 நிமிடத்தை மிஸ் பண்ணிடாதீங்க.. வேற லெவல் விருந்து காத்திருக்கு.. லோகேஷ் கனகராஜ்..!

தளபதி விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் பத்து நிமிடத்தை யாரும் மிஸ் செய்து விட வேண்டாம் என லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு

'கேப்டன் மில்லர்' படத்தில் இன்னொரு நாயகியும் நடித்திருக்கின்றாரா? ஆச்சரிய தகவல்..!

தனுஷ் நடித்து முடித்துள்ள 'கேப்டன் மில்லர்' என்ற திரைப்படத்தில் பிரியங்கா மோகன் நாயகி ஆக நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த படத்தில் இன்னொரு நாயகி நடித்திருக்கிறார்

ஜாமீனில் வெளிவந்த கணவர்.. மகாலட்சுமியின் உருக்கமான பதிவு.. வைரல் புகைப்படம்..!

ரூ.15 கோடி பண மோசடி செய்ததாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் ஜாமீன் பெற்று தற்போது வெளியே வந்துள்ளார்.