அடுத்த வார கேப்டன் இவரா? பிக் ஹவுஸ் போட்டியாளர்களை வச்சு செய்வாரே?

  • IndiaGlitz, [Friday,November 03 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் புதிய கேப்டனை தேர்வு செய்ய டாஸ்க் வைக்கப்பட்டு அதில் வெற்றி பெறுபவர் அடுத்த வார கேப்டனாக தேர்வு செய்யப்படுவார் என்பது தெரிந்ததே.

தொடர்ந்து இரு வாரங்களாக பூர்ணிமா கேப்டனாக இருந்த நிலையில் அடுத்த வார கேப்டன் யார் என்பதை தீர்மானிக்கும் போட்டி இன்று நடக்கிறது. இதில் கூல் சுரேஷ், மாயா மற்றும் விசித்ரா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த போட்டியில் போட்டியாளர்கள் ஒரு காலை தூக்கியபடி அதிக நேரம் இருக்க வேண்டும் என்ற டாஸ்க் வைக்கப்படுகிறது. இதில் விசித்ரா முதலிலேயே அவுட் ஆகி விட, அதனை அடுத்து மாயா மற்றும் கூல் சுரேஷ் காலை தூக்கியபடி நிற்கின்றனர். ஒரு கட்டத்தில் கூல் சுரேஷ் காலை தூக்க முடியாமல் தடுமாறுகிறார்.

இதையடுத்து அடுத்த வார கேப்டன் ஆக மாயா தான் தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது. ஏற்கனவே ஸ்மால் ஹவுஸ் வீட்டில் அதிக நாட்கள் இருந்தவர் மாயா என்பதால் அவர் கேப்டனாக வந்தால், இதுவரை பிக் ஹவுஸ் வீட்டில் அதிக நாட்கள் இருந்தவர்களை வச்சு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நம்மில் யாராவது ஒருவர் கேப்டன் ஆக வந்தால் பிக் ஹவுஸ் போட்டியாளர்களை வச்சு செய்யணும் என்று கூறி இருந்தார். எனவே அவரால் பழிவாங்கப்படும் போட்டியாளர்கள் யாராக இருக்கும் என்பதை நினைக்கவே சுவாரசியமாக உள்ளது. அடுத்த வாரம் மாயா கேப்டன் ஆக இருந்தால் பிக் பாஸ் வீடு பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.