பிக்பாஸ் வீட்டில் மேலும் ஒரு வைல்ட்கார்ட் போட்டியாளர் எண்ட்ரியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று மேலும் ஒரு வைல்ட்கார்ட் போட்டியாளர் பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி ஆவது போன்ற காட்சிகள் இன்றைய முதல் புரமோவில் உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது என்பதும் இதில் நமீதா தானாகவே வெளியேறி விட்டார் என்பதும், அதன் பிறகு ஆறு போட்டியாளர்கள் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார்கள் என்பதும் தெரிந்ததே.

இதனையடுத்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் அபிஷேக் மீண்டும் ரீஎன்ட்ரி ஆகி உள்ளார் என்பதும் அதேபோல் டான்ஸ் மாஸ்டர் அமிர் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட்கார்ட் போட்டியாளராக வந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த வாரம் மேலும் ஒரு போட்டியாளர் பிக்பாஸ் வீட்டில் வைல்ட்கார்ட் என்ட்ரி ஆக இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் சற்றுமுன் வெளியான முதல் புரமோவில் இன்று ஒரு போட்டியாளர் என்ட்ரி ஆக உள்ளது காட்சிகள் உள்ளன. உண்மையில் ஒரு வைல்ட்கார்ட் போட்டியாளர் வருகிறாரா? அல்லது வேறு ஏதேனும் நிகழ்கிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

சென்னையில் 5 நாட்கள் மிக பலத்த மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'மாநாடு' ரிலீஸ் ஆன ஒருசில நிமிடங்களில் 'அண்ணாத்த' படக்குழு எடுத்த அதிரடி முடிவு!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் சற்றுமுன் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகியுள்ளது.

திட்டமிட்டபடி ரிலீஸ் ஆனது 'மாநாடு' திரைப்படம்: ரசிகர்கள் உற்சாகம்!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக நேற்று மாலை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

'மாநாடு' ரிலீஸ் திடீர் தள்ளிவைப்பு: அதிர்ச்சியில் சிம்பு ரசிகர்கள்!

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான 'மாநாடு' திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இன்று திடீரென 'மாநாடு' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

பாரதிராஜாவின் பண்ணைவீட்டில் கார்த்தி: வைரல் புகைப்படம்!

இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் நடிகர் கார்த்தி  இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது