யாஷிகா குறித்து முதல்முறையாக  மனம் திறந்த நிரூப்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களும் தங்களுடைய சொந்த கதை, சோக கதையை கடந்த சில நாட்களாக தெரிவித்து வருகின்றனர் என்பதும் பெரும்பாலானவர்களின் கதைகள் உருக்கமாகவும், ஒரு சிலரின் கதைகள் சுவாரஸ்யமாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில் நிரூப் தனது கதையை கூறுகிறார். அப்போது அவர் முதன்முதலாக யாஷிகா குறித்து மனம் திறந்து பேசுகிறார். நான் பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறேன் என்று செய்தி வெளியானவுடன் பலரும் யாஷிகாவின் எக்ஸ் பாய்பிரெண்ட் பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல உள்ளதாக பலர் கூறினார்கள். நான் பெருமையாக சொல்கிறேன். நான் அவளால் தான் இந்த வீட்டிற்கு வந்தேன். இதை நான் சொல்வதற்கு எந்தவித அசிங்கமும் படவில்லை

அவள்தான் எனக்கு ஒரு வாழ்க்கையை காட்டினாள். எனக்கு இந்த துறையில் யாரையுமே தெரியாது. ஒரு பாதையைக் காட்டியது அவள்தான். ஏன் மக்கள் தப்பாக நினைக்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. ஒரு ஆணால் ஒரு பெண் முன்னேற்றம் அடையும் போது ஒரு பெண்ணால் ஒரு ஆண் வளரக்கூடாதா? என்று கேள்வி எழுப்பினார். இதனையடுத்து சக பெண் போட்டியாளர்கள் கைதட்டி அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.