கேப்டன் பதவி டாஸ்க்: நிரூப்பை மடக்கிய பிரியங்கா!

இன்று கேப்டன் பதவிக்கான டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் முதல் புரோமோவில் அக்ஷரா கேப்டனாக முடியாமல் சிபி செய்த வேலையை பார்த்தோம். இந்த நிலையில் கேப்டன் டாஸ்க்கில் நிரூப் மற்றும் பிரியங்கா இடையே வாக்குவாதம் நடைபெறும் காட்சிகள் இன்றைய 2-வது புரமோவில் உள்ளன.

நிரூப் பொம்மை தலையில் உள்ள பானையை ராஜூ ஜெயமோகன் உடைத்த நிலையில் 13 பேரையும் நல்லவராக காட்டி நீ கேப்டனாக மாறலாம் என்றால் அது எவ்வளவு பெரிய சுயநலம் என்று நிரூப் கூற, அதற்கு உடனே பிரியங்கா, ‘உன்னுடைய பாயிண்ட் என்னவென்று மட்டும் சொல்லு, மத்தவங்க பேசுறத பற்றி நீ பேச வேண்டாம் என்று கூற இருவருக்கும் இடையே வாக்குவாதம் வளர்ந்து வருகிறது.

இந்த நிலையில் மற்றவர்கள் பேசுவதை மட்டுமே பேசும் நீ உன்னுடைய பாயிண்டை பேசவே இல்லை என்று மீண்டும் மீண்டும் பிரியங்கா சொல்ல, அதற்கு அபினய்யும் ஆதரவு கொடுக்கிறார். உடனே அபினய்யிடம் நிரூப் வாக்குவாதத்தை தொடர்கிறார். அடுத்தவங்க பாய்ண்ட்டை நான் என்ன பேசினேன் என நிரூப் கேட்க, அதற்கு நீ பேசியது எல்லாமே அடுத்தவங்க பாயிண்ட் தான் என்று அபினய் பதிலடி கொடுத்தார்.

மேலும் எல்லா இடத்திலும் நான் பேசுவதை மட்டுமே நீ கமெண்ட் செய்கிறாய் என்றால் அந்த இடத்தில் உன்னுடைய பாயிண்ட் ஒன்றுமே இல்லை என பிரியங்கா நிரூப்பை மடக்க அதற்கு பதில் சொல்ல முடியாமல் நிரூப் திணறும் காட்சிகள் இந்த புரமோவில் இடம் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

'ஜெய்பீம்' ராசாக்கண்ணுவின் மனைவிக்கு ராகவா லாரன்ஸ் செய்யும் மிகப்பெரிய உதவி!

சமீபத்தில் வெளியான சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்களும் உலகநாயகன் கமல்ஹாசன்

'மாறன்' படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்!

பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி 'மாறன்' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து

இந்தியாவை கழற்றிவிட்டு, அரைஇறுதிக்குள் நுழைந்த நியூசிலாந்து!

ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியில் “கோப்பை“ எங்களுக்குத்தான் என்று உற்சாகத்துடன் களம் இறங்கிய இந்திய அணி தற்போது

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கிறது.

கனமழை எதிரொலி: சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்!

கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் ஒரு சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது