கமல் முன்னிலையில் சண்டை போடும் நிரூப்-அக்சரா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 28வது நாளாக இன்று நடைபெற உள்ள நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் புரமோக்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. சற்று முன் வெளியான இரண்டாவது புரமோவில் கமல்ஹாசன் முன்னிலையில் நிரூப் மற்றும் அக்ஷரா ஆகிய இருவரும் வாக்குவாதம் செய்யும் காட்சியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று நாமினேஷனில் உள்ள ஏழு பேர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பட்டம் கொடுக்க கமல்ஹாசன் அறிவுறுத்துகிறார். இதில் யாருக்கு எந்த பட்டம் பொருந்தும் என்பதை சரியாக கணித்து கொடுக்கும்படி போட்டியாளர்களுக்கு அவர் கேட்டுக் கொள்கிறார்.

இதனை அடுத்து ’குழப்பமான மனநிலை உடையவர்’ என்ற பட்டத்தை அக்ஷராவுக்கு பிரியங்கா கொடுக்கிறார். அதற்கு பதிலடியாக பிரியங்காவுக்கு ’மற்றவர் மனதை புண்படுத்துபவர்’ என்ற பட்டத்தை அக்சரா கொடுக்கிறார்.

அதேபோல் நிரூப் அக்ஷராவுக்கு ’போலியானவர் என்ற பட்டத்தை கொடுக்கிறார். நிரூப் இந்த பட்டத்தை கொடுத்தவுடன் அக்சரா அவருடன் வாதாடுவதும், அதற்கு நிரூப் காரசாரமாக பதிலளிக்கும் காட்சிகளும் இன்றைய புரமோவில் உள்ளன.

கமல்ஹாசன் முன்னிலையிலும், பார்வையாளர்கள் முன்னிலையிலும், இருவரும் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்றைய நிகழ்ச்சியிலும் இந்த காட்சி சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.