இந்த இரண்டையும் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்: சாட்டையை கையில் எடுக்கும் பிக்பாஸ் கமல்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சனி. ஞாயிறு அன்று கமல் தோன்றும் இரண்டு நாட்களும் சுவராஸ்யமாக இருக்கும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இன்று கமல் தோன்றும் நாள் என்பதால் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இன்றைய நாள் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு காத்திருக்கின்றனர்

இந்த நிலையில் சற்று முன் வெளியான புரமோவில் கமல்ஹாசன் போட்டியாளர்களுக்கு இந்த இரண்டையும் சுட்டிக்காட்டிய ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

வெளியே புயல் மழை ஓய்ந்த சாயல் தெரிகிறது. ஆனால் வீட்டிற்குள் புயல் சின்னங்கள் உருவாகி இருக்கின்றன. பொம்மைகளை வைத்து விளையாட சொன்ன ஒரே காரணத்திற்காக இவ்வளவு குழந்தைத்தனமாக மாற வேண்டியதில்லை. இப்பொழுது இவர்களுடைய விளையாட்டு மல்யுத்தத்தை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கின்றது. எது எல்லை? எது வரம்பு என்பதை இவர்களுக்கு சுட்டிக் காட்டியே ஆக வேண்டும் அதைச் செய்வோம் என்று கமல் கூறியதிலிருந்து இன்றைய நிகழ்ச்சியில் கமல் சாட்டையை கையில் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.