உங்களிடம் மாற்றம் தொடங்கிய நாள் இதுதான்: பிரியங்காவிடம் கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரியங்கா ஆரம்பத்தில் பிக்பாஸையே கலாய்த்து செமையாக விளையாடினார் என்பதும் ஆனால் நாளாக ஆக அவருடைய சுயரூபம் வெளிப்பட்டது என ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய முந்தைய புரமோவில் பிரியங்கா குறித்து அக்சரா கூறிய போது ’தேவையில்லாமல் அடுத்தவர் விஷயங்களில் பிரியங்கா தலையிடுகிறார் என்றும், அவருக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என்ற வகையில் செயல்படுகிறார் என்று கூறினார்.

இதனை அடுத்து இன்றைய அடுத்த புரமோவில், பிரியங்காவிடம் கமல்ஹாசன் கூறிய போது ’நீங்கள் கண்ணாடி பிம்பம் டாஸ்க்கில் கையை பிடித்துக்கொண்டு ஒரு டாஸ்க் செய்தீர்கள் அல்லவா? அன்றையிலிருந்து உங்களிடம் ஒரு மாற்றத்தை நான் பார்க்கிறேன். இப்பொழுது அக்சரா கூறிய குற்றச்சாட்டை இதற்கு முன்னர் யாராவது சொல்லி இருக்கிறார்களா என்று யோசித்து பாருங்கள் என்று கமல் கேட்டபோது அதற்கு பதில் சொல்லாமல் பிரியங்கா இருந்தபோது ’சொல்லியிருக்கிறார்கள்’ என்று கமல் கூறினார்.

நான் என்னுடைய பிரச்சனையை மற்றவர்கள் மேல் எடுத்துக் கொண்டு சென்றது கிடையாது’ என்று பிரியங்கா கூறியபோது, ‘அவ்வாறு நீங்கள் நினைக்கின்றீர்கள், நீங்கள் அதை நன்றாக யோசித்துப் பாருங்கள்’ என்று கமல் கூறியவுடன் ’நான் என்னை மாற்றிக் கொள்கிறேன்’ என்று பிரியங்கா கூறுகிறார்.

மொத்தத்தில் இன்றைய கமலஹாசன் எபிசோடு பிரியங்காவுக்கு சரியான பாடம் கற்பிக்கும் எபிசோட் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

எஸ்.எஸ்.ராஜமெளலி வெளியிடும் 'பிரம்மாஸ்திரம்': ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இந்திய திரையுலகை திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் உருவாக்கப்படும் திரைப்படமான 'பிரம்மாஸ்திரம்' என்ற படத்தை தென்னிந்திய மொழிகளில் பிரபல இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி

அவங்களுக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி: பிரியங்காவை கமலிடம் போட்டு கொடுத்த அக்சரா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு டாஸ்க்கில் பிரியங்கா மற்றும் அக்சரா இடையே கடுமையான மோதல் வந்தது அனைவரும் தெரிந்ததே. தமிழில் பேசு என்று ப்ரியங்கா கூறியதற்கு

ஒரு வயதில் அப்பா மரணம், அம்மா கொலை: பிக்பாஸ் அமீர் கடந்து வந்த முட்பாதைகள்!

ஒரு வயதில் அப்பாவை இழந்து, பத்தாம் வகுப்பு படிக்கும்போது அம்மாவை இழந்து, அனாதை இல்லத்தில் படித்து தற்போது நல்ல நிலைக்கு வந்திருக்கும் பிக்பாஸ் அமீரின் கடந்து வந்த முட்பாதைகள்

நரைமுடி இருந்தா என்ன? அப்படியே மணமேடை ஏறிய பிரபல நடிகரின் மகள்!

பிரபல பாலிவுட் நடிகர் திலீப் ஜோஷியின் மகள் நியாதியின் திருமணம் சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த திருமணத்தின்போது

பிரபல கவிஞர் எழுதிய கதையில் நடிகை ஐஸ்வர்யா ராய்… வைரல் தகவல்!

பாலிவுட் சினிமாவில் உருவாக இருக்கும் 3 ஹீரோயின்களை மையப்படுத்திய திரைப்படம் ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா ராய் இணைந்து