இல்லாத விஷயத்தை இருப்பதாக காட்டுவதுதான் பிரேக்கிங் செய்தியா? இமான் கண்டனம்!

இல்லாத ஒரு விஷயத்தை இருப்பதாக காட்டிக் கொள்வதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என இமான் அண்ணாச்சி பிரேக்கிங் நியூஸ் டாஸ்க்கில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இன்று பிரேக்கிங் நியூஸ் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது என்பதும் இரு அணிகளாகப் பிரிந்து பிரேக்கிங் நியூஸ் என்ற வகையில் சக போட்டியாளர்கள் குறித்த செய்திகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த டாஸ்க்கில் ஆங்கராக செயல்படும் பிரியங்கா, நிரூப் இடம் நீங்கள் ஏற்கனவே எமோஷனலாக கவலையுடன் இருக்கும் போது உங்களை மேலும் அந்த இடத்திற்கு தள்ளும் நபர் யார்? என கேட்க அதற்கு ’சந்தேகமே இல்லாமல் இமான் அண்ணாச்சி தான்’ என்று நிரூப் கூறுகிறார்.

அதற்கு இமான் அண்ணாச்சி விளக்கம் கேட்க அப்போது விளக்கம் சொல்ல பிரியங்கா, நிரூப் முயன்றபோது நெறியாளராக இருக்கும் அபிஷேக், ‘செய்திகளை மக்களுக்கு கொடுப்பது மட்டுமே பிரியங்காவுடன் வேலை’ என்று கூறுகிறார். இதனை அடுத்து ’இல்லாத ஒரு விஷயத்தை இருப்பதாக காட்டிக் கொண்டு மக்களை குழப்ப நினைப்பதற்காக கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று இமான் அண்ணாச்சி கூறி வெளிநடப்பு செய்யும் காட்சியோடு இன்றைய அடுத்த புரமோ முடிவுக்கு வருகிறது.

மொத்தத்தில் பிரேக்கிங் நியூஸ் டாஸ்க் போட்டியாளர்கள் மத்தியில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறது என தெரிகிறது.

More News

வங்கக்கடலில் புதிய புயல்… சென்னை வானிலை தகவல்!

தெற்கு அந்தமான் அருகே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி

7 ஆவது முறையாக விருது… அசத்தும் கால்பந்து கிங் லியோனல் மெஸ்ஸி!

கால்பந்து உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து வரும் லியோனல் மெஸ்ஸிக்கு “பாலன் டி ஓர்“ விருது வழங்கப்பட்டு உள்ளது.

கமல்ஹாசன் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்கள் நீதி மய்யம்!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி விட்டதாக வெளிவந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் சற்றுமுன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்படும்: கலெக்டர் எச்சரிக்கையால் திரையுலகினர் அதிர்ச்சி!

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை அனுமதிக்கும் திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளது திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

செம்மையா பண்ற நீ: மீண்டும் மோதும் தாமரை-பிரியங்கா!

கடந்த சில நாட்களாகவே தாமரை மற்றும் பிரியங்கா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது என்பதும் இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதங்கள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே