அவங்களுக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி: பிரியங்காவை கமலிடம் போட்டு கொடுத்த அக்சரா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு டாஸ்க்கில் பிரியங்கா மற்றும் அக்சரா இடையே கடுமையான மோதல் வந்தது அனைவரும் தெரிந்ததே. தமிழில் பேசு என்று ப்ரியங்கா கூறியதற்கு ’சரிதான் போம்மா என்று அக்சரா கூறியதை அடுத்து பிரியங்கா அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க இருவரும் காரசாரமாக மோதிக்கொண்டனர்.

பிக்பாஸ் வீட்டில் பெரும்பாலும் பிரியங்கா ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் அக்சராவை மட்டும் தமிழில் பேச சொன்னதையும் அதற்காக அவர் அதிகப்படியாக கோபப்பட்டதையும் ரசிகர்கள் விமர்சனம் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதுகுறித்து இன்று கமல்ஹாசன் அக்சராவிடம் விசாரிக்கிறார். இன்னும் நான்கு வாரம் தான் இருக்கிறது, பிரியங்கா குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டபோது, ‘எந்த ஒரு விஷயத்திலும் பிரியங்கா தேவையில்லாமல் நுழைந்து வருவதை நான் அடிக்கடி கவனித்து வருகிறேன். அவர்களுக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என்ற எண்ணத்தில் தான் அவர் இருப்பார் என்று கூறினார்.

மேலும் இது இந்த வாரம் மட்டுமா? அல்லது ஆரம்பத்திலிருந்தே அப்படித்தானா? என்று கமல் கேட்க ’ஆரம்பத்திலிருந்தே பிரியங்கா இப்படித்தான் இருக்கிறார்கள்’ என்று பிரியங்கா கமலிடம் போட்டுக் கொடுக்க அவரை பிரியங்கா ஒரு மாதிரியாக பார்ப்பதுடன் இன்றைய புரொமோ முடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.