என் வாழ்க்கையில இனிமேல் உன்கிட்ட பேசவே மாட்டேன்: அக்சரா கூறுவது யாரை?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய டாஸ்கில் ராஜூ போட்டியாளர்களின் புகைப்படங்கள் வரைந்த பெட்டியின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என்பதும், அவரை இழுக்க முடியாமல் சக போட்டியாளர்கள் திணறி வருகின்றனர் என்பதையும் முதல் புரமோவில் பார்த்தோம்.

இந்த நிலையில் ராஜூ தொடர்ந்து அந்த பெட்டியின் மேல் உட்கார்ந்து இருக்கும் நிலையில், ‘ராஜூ இவ்வாறு உட்கார்ந்து கொண்டால் மற்றவர்கள் அவரை தள்ளிவிட்டு தான் விளையாட வேண்டும் என அக்ஷரா கூறுகிறார்

அப்போது ’வா வந்து தள்ளு’ என ராஜூ கூறும்போது, ‘இனிமேல் என்னிடம் பேசாதே, என் வாழ்க்கையில் இனிமேல் உன்னிடம் நான் பேசவே மாட்டேன்’ என்று ஆவேசமாக கூறுகிறார். அப்போது திடீரென அக்ஷராவுக்கும், பிரியங்காவுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.

அப்போது பிரியங்கா, ‘என்னிடம் போம்மா கீம்மா என்றெல்லாம் பேசுவதை வைத்துக் கொள்ளாதே, நான் மரியாதையாக பேசுவது போல் நீயும் மரியாதையாக பேச வேண்டும். இந்த வீட்டில் சரி, தவறு என்பது எதுவுமே கிடையாது என்று கூறுகிறார். அதற்கு அக்ஷராவும் ஆவேசமாக பதிலளிக்கிறார். மொத்தத்தில் இன்று அக்ஷரா மிக ஆவேசமாக இருப்பதை பார்க்கும்போது இன்றைய நிகழ்ச்சி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

More News

மிஸ் யுனிவர்ஸ் அழகியுடன் தேசிய கொடியை கையில் பிடித்திருக்கும் தமிழ் பட நடிகை!

சமீபத்தில் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற அழகியுடன் பிரபல நடிகை ஒருவர் தேசிய கொடியை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

ஓடிடியில் வெளியாகும் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அடுத்தபடம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா நடித்து முடித்துள்ள அடுத்த படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகை சரண்யா மோகனுக்கு இவ்வளவு பெரிய மகன், மகளா?

தமிழ் திரை உலகின் நடிகைகளில் ஒருவரான சரண்யா மோகன் தனது சமூக வலைத்தளத்தில் மகன் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் நடிகை சரண்யா மோகனுக்கு இவ்வளவு பெரிய

ராஜூவை கவிழ்க்க முயற்சிக்கும் ஒட்டுமொத்த போட்டியாளர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 72 நாட்கள் முடிவடைந்த நிலையில் தற்போது போட்டியாளர்களுக்கு சில கடுமையான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

இயக்குனர் சேரன் நடிக்கும் அடுத்த படம்: டைட்டில் போஸ்டர் ரிலீஸ்!

தமிழ் திரையுலகின் இயக்குனர் மற்றும் நடிகரான சேரன் நடிக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் டைட்டில் போஸ்டர் சற்று முன் வெளியாகி உள்ளது.