நான் பணப்பெட்டியை எடுத்ததே அவனை காப்பாற்றத்தான்: கேபி கூறிய அதிர்ச்சி காரணம்!

  • IndiaGlitz, [Thursday,January 14 2021]

பிக்பாஸ் வீட்டில் ஐந்து லட்ச ரூபாய் பணப் பெட்டி வைக்கப்பட்டது என்பதும் அந்த பணப்பெட்டியை கேபி எடுத்து விட்டார் என்பது குறித்த புரமோ வீடியோக்களை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் அந்த காட்சி வந்த போதுதான் இந்த பணத்தை எடுத்தது ஏன் என்பதற்கு கேபி விளக்கம் அளித்துள்ளார்

கேபி 5 லட்சம் கொண்ட பணப்பெட்டியை வேகமாக எடுத்தபோது, அந்த பெட்டியை இருந்த இடத்தில் வை, நான் எடுக்க வேண்டும் என்று ரியோ கூறினார். ஆனால் விடாப்பிடியாக தான் வெளியே போகப் போவதாகவும் தனது அம்மாவை தான் சந்திக்கப் போவதாகவும் கேபி கூறினார். அதன் பிறகு கேபியை ரியோ பலவிதமாக சமாதனம் செய்து பெட்டி வைக்குமாறு கெஞ்சினார். உனக்கு உன்னுடைய அம்மாவை மட்டும் தான் பார்க்க வேண்டும், ஆனால் எனக்கு பார்க்க வேண்டிய ஆட்கள் நிறைய இருக்கிறார்கள், எனவே நான் போகப்போகிறேன் பணப்பெட்டியை என்னிடம் கொடு’ என்றும் கூறினார்

ஆனால் கேபி தான் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாக கூறியதை அடுத்து சக போட்டியாளர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதன் நிலையில் சோம்சேகரிடம் கேபி தனியாக பேசியபோது, ‘நான் இந்த பணப்பெட்டியை எனக்காக எடுக்கவில்லை, நான் எடுக்கவில்லை என்றால் ரியோ எடுத்துவிடுவான் அதனால்தான் நான் முந்திக் கொண்டேன் அந்த பெட்டியை நோக்கி செல்லும் போது எனக்கு அந்த அளவுக்கு வருத்தமாக இருந்தது. நான் ஒரு பத்து வினாடிகள் தாமதம் செய்திருந்தால் கூட ரியோ அதை எடுத்திருப்பான். ரியோ அந்த பெட்டியை எடுக்க கூடாது என்பதற்காகத்தான் நான் முந்திக் கொண்டு அதை எடுத்தேன் என்று கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

எனவே பண பெட்டியை கேபி எடுத்தது தனக்காக இல்லை என்றும் ரியோவை காப்பாற்றி ஃபைனலுக்கு அனுப்ப வேண்டும் என்பதே கேபியின் நோக்கமாக இருந்துள்ளது என்பது அவரது விளக்கத்தின் மூலம் தெரியவருகிறது

More News

பொட்டியில ஒரு கோடி ரூபாய் இருந்தால் கூட எடுக்க மாட்டேன்: சொன்னது யார் தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற 6 போட்டியாளர்களுக்கு மட்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட தொகை பெட்டியில் வழங்கப்படும்

மதுரை முத்துவின் சிறப்பு பட்டிமன்றம்: IndiaGlitz பொங்கல் ஸ்பெஷல்

மற்ற மொழிகளுக்கு இல்லாத பல பெருமைகள் தமிழுக்கு உள்ளது என்பது தமிழர்கள் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தமிழில் மட்டுமே நடந்து வரும் பெருமைக்குரியதாக கருதப்படுவது பட்டிமன்றம்

ஓவியாவின் காதலரா இவர்? வைரலாகும் புகைப்படம்!

பிக்பாஸ் என்றாலே உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது ஓவியாவின் முகம்தான் என்ற அளவுக்கு ஓவியா மக்கள் மனதில் அந்த அளவுக்கு இடம் பிடித்திருந்தார்.

பணப்பெட்டியை எடுத்துவிட்டு கதறி அழுத கேபி!

பிக்பாஸ் வீட்டில் 100 நாட்களுக்கும் மேல் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு தகுதி 6 போட்டியாளர்களில் யாராவது ஒருவர் ஐந்து லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு போட்டியில் இருந்து விலகி விடலாம்

ஓட்டு போட்டது ரியோவுக்கு, வாழ்த்து தெரிவித்தது ஆரிக்கு: நட்சத்திர ஜோடியின் பதிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்பதும் இன்னும் இரண்டு நாட்களில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது