வெளியேறும் ரமேஷை விடைபெற கூட அனுமதிக்காத கமல்: அன்பு குரூப் அதிர்ச்சி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்படவிருக்கும் நிலையில் அந்த இரண்டு பேரில் ஒருவர் ரமேஷ் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் இன்றைய மூன்றாவது புரமோ வீடியோவில் அது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது

மூன்றாவது புரமோவில் நாமினேஷன் பட்டியலில் உள்ள ரமேஷை கன்பெக்சன் அறைக்கும், சோம்சேகரை ஸ்டோர் ரூமுக்கும் செல்லுமாறு கமல் கூறுகிறார். இவர்கள் இருவரில் ஒருவர் இன்று வெளியேற்றப்படுவார் என்றும், வெளியேற்றப்படும் நபர் இங்கே என்னை நேரடியாக வந்து சந்திப்பார் என்றும் கமல் கூறுகிறார். இதனை அடுத்து இன்று வெளியேறும் நபர் சக போட்டியாளர்களிடம் விடை பெற்றுக் கொள்ளக் கூட அனுமதிக்கப்படாமல் அப்படியே கமல்ஹாசனை சந்திக்க வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வெளியேற காத்திருக்கும் இரண்டு பேர்களுமே அர்ச்சனாவின் அன்பு குரூப்பில் உள்ளவர்கள் என்பதால் அர்ச்சனாவின் அன்பு குரூப்பினர் கடும் அதிர்ச்சி அடைகின்றனர்.

மேலும் இந்த வாரம் மோசமான போட்டியாளர் என்று அனிதா சர்ச்சைக்குரிய வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் கமல்ஹாசன் முன் இன்று மீண்டும் மோசமான போட்டியாளர் யார் என்பதை தேர்வு செய்ய அனுமதிக்கப்படுகிறது. அப்போது மோசமான போட்டியாளராக நிஷா தேர்வு செய்யப்பட்டதை அடுத்து நிஷாவை சிறையில் அடைக்கிறார் ரியோ.

மொத்தத்தில் இன்று அர்ச்சனாவின் அன்பு குரூப்பை கமல் முழுக்க முழுக்க வச்சு செய்கிறார் என்பது இந்த மூன்றாவது புரமோ வீடியோவில் இருந்து தெரியவருகிறது

More News

அசர வைக்கும் காரணம்… டைம் இதழின் 2020 ஹீரோக்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்திய அமெரிக்கர்!!!

அமெரிக்காவின் மிக பிரபலமான பத்திரிக்கை டைம் இதழ். இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர்களை தேர்வு செய்து அட்டைப் படத்தை நேற்று வெளியிட்டது

தனியார் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வா??? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வுகளை ஆன்லைனில் நடத்திக் கொள்ளலாம் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

பிறந்த நாளன்று விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங்…

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் தன்னுடைய பிறந்த நாளன்று டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

கமல், ரஜினியை அடுத்து சட்டமன்ற தேர்தலில் குதிக்கும் பிரபல ஹீரோ: தனிக்கட்சியா?

தமிழகத்தில் அரசியல் ஆளுமைகளாக இருந்த கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் அடுத்தடுத்து காலமானதை அடுத்து ஆளுமைக்கான வெற்றிடம் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

பீட்டர்பால் விவகாரம்: வனிதாவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் வனிதா மீதும் கணவர் மீதும் பீட்டரின் முதல் மனைவி வழக்கு தொடர்ந்தார்