பாலாஜியுடன் அடிதடியை தவிர்த்தேன். வேல்முருகன் கூறும் அதிர்ச்சி தகவல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வெளியேறிய வேல்முருகன் உள்ளே நடந்த பல விஷயங்களை கூறியது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. குறிப்பாக பாலாஜி குறித்தும், அவர் செய்த தந்திரங்கள் குறித்தும் அவர் கூறியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

ஒருநாள் பாலா என்னிடம் வந்து ’நீங்கள் யாரிடமும் ஓட்ட மாட்டேன் என்கிறீர்கள், நெருக்கமாக பழக மாட்டேன் என்கிறீர்கள், அதனால் உங்களுக்கு தான் நஷ்டம்’ என்றும் கூறினார். ’என்ன நஷ்டம்’ என்று நான் கேட்டபோது ’இப்போது ஆஜித்துடன் நான் நெருக்கமாக பழகி வருகிறேன். அவன் ஏதாவது தவறு செய்தால் அந்த தவறை நான் சுட்டிக் காட்ட மாட்டேன். ஆனால் என்னுடன் நெருக்கமாக பழகவில்லை. அதனால் நீங்கள் சின்ன தவறு செய்தாலும் அதை பெரிதாக சுட்டிக் காட்டுவேன்’ என்று கூறினார்

’மேலும் நான் ஒரு கிராமத்தை சேர்ந்தவன் என்பதால் என்னால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது. பாலாஜியுடன் ஏதாவது பேசி அது பிரச்சனையாகி அதனால் அடிதடியாக ஆகி விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தேன்’ என்று கூறியுள்ளார்

’மேலும் அர்ச்சனா வந்த முதல் நாளே, பாலாஜி அவரிடம் ’தலை வலி வந்துவிட்டது என்று அவரது முன்னிலையிலேயே கூறினார். ’என்னை தலைவலி என்கிறாயா’ என அர்ச்சனா கேட்டதற்கு ’ஆமாம் உங்களை தான் தலைவலி என்கிறேன்’ அவர் கூறியதும் அனைத்து போட்டியாளர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது

’ஒரு போட்டியாளரை வெறுப்பேற்றி அவரை கோபமடைந்து செய்து வெளியேற்ற வேண்டும் என்ற தந்திரத்தை தான் பாலாஜி கடைபிடித்து வருகிறார். இது சரியான விளையாட்டு அல்ல’ என்று பாலாஜி மீது வேல்முருகன் குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 

More News

கேப்டன்சிக்கு தகுதியே இல்லாதவர் வீராட் கோலி… காட்டம் தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!!!

2020 ஐபில்எல் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது.

நீர் மேலாண்மையில் முதலிடம் பெற்ற தமிழகம்… முதல்வரின் நடவடிக்கையால் சாத்தியம்!!!

தமிழகம் நீர் மேலாண்மையின் சிறந்து விளங்கும் மாநிலமாகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பிக்பாஸ் கேட்ட கேள்வியும் சமயோசிதமாக கமல் அளித்த பதிலும்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் கமல்ஹாசன் தோன்றும் நாட்கள் என்பதால் மற்ற நாட்களை விட கூடுதல் சுவராஸ்யமாக இருக்கும்

நிஜமாவே பெண்கள் முறத்தால் புலியை விரட்டி இருப்பாங்களோ??? பழமொழியை நிரூபிக்கும் புது கண்டுபிடிப்பு!!!

வீரம் என்ற வார்த்தைக்கு பெரும்பாலும் ஆண்களையே கைக் காட்டுகிறோம். 21 ஆம் நூற்றாண்டில் இந்த கணிப்பு தவறு எனப்பல நேரங்களில் சொல்லப்பட்டாலும்

சுரேஷ் வெளியேற்றம், எஸ்பிபி வீடியோ: இன்றைய செண்டிமெண்ட் எபிசோட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் கமல்ஹாசனுக்கு போட்டியாளர்களின் பஞ்சாயத்தை தீர்க்கவே நேரம் சரியாக இருக்கும்.