நீதிமன்றமாகும் பிக்பாஸ் வீடு: குற்றவாளிகள் யார் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர் என்பதும் இரண்டு போட்டியாளர்கள் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக உள்ளே வந்துள்ளனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்குகள் சுவராசியமாக இருப்பதால் நிகழ்ச்சியும் சுறுசுறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது என்பதும், போட்டியாளர்களில் ஒருசிலரை தவிர மற்ற அனைவரும் டாஸ்குகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று அளிக்கப்பட்டுள்ள புதிய டாஸ்க்கில் நீதிமன்றம் போல் அமைக்கப்பட்டு அதில் போட்டியாளர்கள் சக போட்டியாளர்கள் மீது குற்றஞ்சாட்டலாம் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு போட்டியாளரும், வீட்டில் இருக்கும் மற்றவர்கள் மீதான கருத்துவேறுபாடுகளை பதிவு செய்யலாம் என டாஸ்க்கில் கூறியதை அடுத்து, போட்டியாளர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

எதிர்பார்த்தபடியே சனம் மீது பாலாஜியும், பாலாஜி மீது சனம்ஷெட்டியும் குற்றஞ்சாட்டுகின்றனர். புதிதாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த சுசித்ரா இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியாகிறார். பாலாஜி, சனம் ஆகிய இருவரும் மாறி மாறி ஆவேசமாக விவாதம் செய்யும் காட்சிகள் முதல் புரமோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நீதிமன்றத்தில் குற்றவாளிகள் யார் யார் என தீர்ப்பளிக்கப்படவுள்ளது என்பதை இன்றைய நிகழ்ச்சியில் தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

More News

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட டொனால்ட் ட்ரம்ப்பின் மெழுகுச்சிலை… கேள்விக்குறியுடன் ஊடகங்கள்!!!

ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் புகழ்பெற்ற மடாமே மெழுகு சிலை அருங்காட்சியகம் இயங்கி வருகிறது.

மீண்டும் தொடங்கும் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு: பரபரப்பு தகவல் 

பிரமாண்ட இயக்குநர் மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக நடைபெறவில்லை என்பது தெரிந்ததே.

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும் சிம்புவுக்கும் என்ன சம்பந்தம்? ஒரு ஆச்சரிய தகவல்!

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும் சிம்புவுக்கும் நெருங்கிய சம்பந்தம் இருப்பதாக அவரது உடற்பயிற்சி பயிற்சியாளர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

குளிக்கும் பெண்ணை வீடியோ எடுத்த வாலிபர்: தட்டிக்கேட்ட கணவருக்கு அடி உதை!

விழுப்புரம் மாவட்டத்தில் பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருக்கும் போது மொபைல் போனில் வீடியோ எடுத்த வாலிபர் ஒருவரை தட்டிக்கேட்ட அவரது கணவருக்கு அடி உதை கிடைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ரஜினி வீட்டிற்கு வந்து குவியும் அஞ்சல் அட்டைகள்: என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது குறித்த வாத, விவாதங்கள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் நடைபெற்று வருகிறது.