அரக்கனாக மாறிய சுரேஷ்: போட்டியாளர்களின் பாடு திண்டாட்டம்தான்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு டாஸ்குகள் வைப்பதே அவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்துவதும் சண்டை செய்ய வைப்பதும் தான் என்பது தெரிந்ததே. அந்த வகையில் ஏற்கனவே இதுவரை கொடுக்கப்பட்ட டாஸ்க்கினால் பல பிரச்சனைகள் வந்துள்ள நிலையில் தற்போது புதிதாக அரக்கர்-அரக்கியர் என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது

இதனை அடுத்து போட்டியாளர்களில் சிலர் அரக்கர், அரக்கிகளாக மாறியுள்ளனர். அவர்களிடம் சிக்கி சின்னாபின்னாமடையும் மற்றவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. மேலும் அரக்கர்கள், அரக்கிகள் உங்களை என்னதான் தொந்தரவு செய்தாலும் அதற்கு நீங்கள் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் சிலையாக இருக்க வேண்டும் என்பது பிக்பாஸின் விதியாக உள்ளது. சுரேஷ், அனிதா, வேல்முருகன் ஆகியோர்கள் அரக்கர்களாக நடிக்கவுள்ளனர்.

சாதாரணமாகவே சுரேஷை சமாளிப்பது கடினம் என்ற நிலையில் தற்போது அரக்கராக மாறியிருக்கும் அவரிடம் மற்ற போட்டியாளர்கள் என்ன பாடுபடப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

திரையுலகில் அடுத்த அவதாரம் எடுத்த நமீதா! அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழ் திரையுலகில் சமீபத்தில் நடிகை வரலட்சுமி இயக்குனர் அவதாரம் எடுத்தார் என்பதும் ஒட்டுமொத்த திரையுலகமும் அவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்தது என்பதும் தெரிந்ததே 

3 வயதில் உலகச் சாதனை படைத்த ஈரோட்டு சிறுமி… குவியும் பாராட்டுகள்!!!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி தனது அபார நினைவாற்றல் திறன் காரணமாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார்.

மாட்டுச்சாணம் கதிர்வீச்சை கட்டுப்படுத்துமா??? வகை தொகையாக கேள்வி எழுப்பும் 600 விஞ்ஞானிகள்!!!

செல்போனில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சைத் தடுக்கும் வகையில் மாட்டுச் சாணத்தை கொண்டு  புதிய “சிப்” உருவாக்கப் பட்டுள்ளதாக ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் தலைவர் கூறியிருக்கிறார்

கொரோனாவுக்கு ஏற்ற சிகிச்சை முறை… இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அசத்தல்!!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வரும் இந்திய வம்சாவாளியைச் சேர்ந்த அமெரிக்க வாழ் சிறுமிக்கு இளம் விஞ்ஞானிகள் விருது வழங்கி கவுரவிக்கப் பட்டுள்ளது.

தமிழக முதல்வருடன் விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படமான '800' என்ற திரைப்படத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதிக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில்