இந்த வாரம் ஜெயிலுக்கு போன இருவர் இவர்கள் தான்: ஆரி தப்பிச்சிட்டாரே!

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் சிறப்பாக செயல்பட்டவர்கள் அடுத்த வார தலைவர் போட்டிக்கான டாஸ்க்கில் பங்கு கொள்வார்கள் என்பதும், சுவாரஸ்யம் இல்லாமல் செயல்பட்ட இருவர் ஓய்வு எடுக்கும் அறையான சிறையில் அடைக்கப்படுவதும் வழக்கம்

அந்த வகையில் முதல் புரமோவில் இந்த வாரம் சிறப்பாக செயல்பட்டவர்கள் குறித்த நாமினேஷன் செய்யப்பட்டதை பார்த்த நிலையில் தற்போது இந்த வாரம் முழுவதும் சுவாரஸ்யம் இல்லாமல் செயல்பட்டவர்கள் குறித்த நாமினேஷன் செய்யப்படுகிறது

இதில் ஆரி, ரியோ, சோம் ஆகியோர் ஷிவானியையும், அனிதா, ரம்யா, பாலாஜி, சோம் ஆகியோர்கள் கேப்ரில்லாவையும் நாமினேஷன் செய்கின்றனர். இதனையடுத்து ஷிவானி, கேபி ஆகிய இருவரும் ஓய்வு எடுக்கும் அறை என்னும் சிறைக்கு செல்கின்றனர்

இந்த நிலையில் தான் சிறைக்கு செல்வது குறித்து சிறைக்கு செல்லும் முன் ஷிவானி கூறியபோது ’நாமினேஷன் ஓகே ஆனால் குற்றச்சாட்டுகள் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை’ என சற்றே கோபத்துடன் கூறுகிறார். இதனை அடுத்து இந்த வார கேப்டனான ரம்யா இருவரையும் சிறையில் அடைக்கும் காட்சியோடு இன்றைய இரண்டாம் புரோமோ முடிவுக்கு வருகிறது

இந்த வாரம் ஆரியுடன் அனிதா, அர்ச்சனா, கேபி, ரம்யா உள்ளிட்டோர் கடுமையாக வாக்குவாதம் செய்ததால் அவர் சிறைக்கு செல்ல அதிக வாய்ப்பு இருந்ததாக கருதப்பட்ட நிலையில் அவர் அதிர்ஷ்டவசமாக தப்பித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

தனிக்குழு அமைத்து, உலகிலேயே அதிகளவு நன்கொடையை வாரி வழங்கிய பெண்மணி!!!

அமேசான் நிறுவனத் தலைவர் ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவி மெக்கன்சி ஸ்காட் கொரோனா காலத்தில் உலகிலேயே அதிகளவு தொகையை நன்கொடையாக வாரி வழங்கி இருக்கிறார்

விஷாலின் 'எனிமி' அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக்!

இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் 'எனிமி' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று

மீண்டும் காதல்? வனிதா இன்ஸ்டாகிராம் பதிவால் பரபரப்பு!

நடிகை வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் திடீரென இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது 

தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' சென்சார் தகவல்கள்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதியே வெளியாக இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டிருக்கின்றது

ஹேமந்த் கொன்னுருவாருன்னு சித்ரா பயந்திருக்கலாம்: பிரபல நடிகை அதிர்ச்சி தகவல்!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது தற்கொலைக்கு காரணமானவர்