அடுத்த வாரம் கேப்டன் ஆரி? கதி கலங்கும் சம்யுக்தா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சிறப்பாக செயல்பட்டவர்களாக ஆரி, சோம் மற்றும் நிஷா ஆகிய மூவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவருக்கும் வைக்கப்படும் டாஸ்க்கில் வெற்றி பெறுபவர் அடுத்தவார கேப்டனாக தேர்வு செய்யப்படுவார்.

அடுத்த வார கேப்டன் டாஸ்க்கில் கண்டிப்பாக ஆரி மற்றும் சோம் ஆகிய இருவருக்கும் தான் கடுமையான போட்டி இருக்கும் என்றும் அதில் ஆரி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. மேலும் இந்த வாரம் சிறப்பாக செயல்படும் போட்டியாளர்களில் ஒருவராக ஆரி தேர்வு செய்யும்போது சம்யுக்தாவின் முகம் மாறுவதை முதல் புரமோவிலேயே பார்த்தோம்.

இந்த நிலையில் இன்றைய இரண்டாவது புரமோவில் சக போட்டியாளர்களிடம் சம்யுக்தா புலம்பி வருகிறார். நீதிமன்ற அறையில் ஆரி கத்தியதை யாருமே தவறாக பார்க்கவில்லையா? பிறகு எப்படி அவரை இந்த வாரம் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளராக தேர்வு செய்கிறீர்கள்? என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

சம்யுக்தா இந்த வாரம் அதிர்ஷ்டத்தில் கேப்டனாகி ஆரி மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்திய நிலையில், அடுத்த வாரம் ஆரி கேப்டன் ஆகிவிட்டால் சம்யுக்தாவுக்கு அது அப்படியே பூமராங் மாதிரி திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சம்யுக்தா கதி கலங்கி இருப்பதாக ஆஜித்திடம் அவர் புலம்புவதில் இருந்து தெரியவருகிறது .

அடுத்த வாரம் கேப்டனாக ஆரி தேர்வு செய்யப்பட்டால் பல தரமான சம்பவங்கள் சம்யுக்தாவுக்கு காத்து இருப்பதாகவே கருதப்படுகிறது.