தந்தையை கவனிக்க தவறிவிட்டேன்: குற்ற உணர்ச்சியால் கதறியழுத கண்டஸ்டண்ட்!

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 100-வது நாளை எட்டியுள்ளது என்பதும் இன்னும் 4 நாட்களில் இந்த நிகழ்ச்சி முடிவடைய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் ஷிவானி, சுரேஷ் மற்றும் அனிதா தவிர மீதி அனைவரும் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினர்களாக திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் ரீஎண்ட்ரி ஆன ரேகா உணர்ச்சிவசப்பட்டு தனது தந்தை குறித்து பேசி கதறி அழுத காட்சிகள் இன்றைய மூன்றாம் புரமோ வீடியோவில் உள்ளது. நீங்கள் கடந்து வந்த பாதை என்ற டாஸ்க்கில் நான் ஒரு விஷயத்தை கூறவில்லை. குறிப்பாக எனது அப்பாவை பற்றி சொல்லவேண்டும் என்று நினைத்தேன். நான் நடிகையாக பிசியாக இருந்த காலத்தில் எனது அம்மா என் கூடவே வந்து இருந்தார்கள். அப்பாவை கவனிக்க ஆளில்லாமல் இருந்தது. அதனால் அவர் உடல் நலக்கோளாறு காரணமாக இறந்துவிட்டார். நான் அவரை சரியாக கவனிக்காததால் தான் அவர் இறந்துவிட்டார் என்ற குற்ற உணர்ச்சி எனக்கு இன்றும் உள்ளது என்று கதறி அழுதவாறு கூறினார்.

அபோது பாலாஜி உள்பட மற்ற அனைத்து போட்டியாளர்களும் அவரை கட்டி அணைத்து ஆறுதல் கூறினர். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் காட்சிகள் என்ற மூன்றாவது புரமோவில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

மாயமான பிரபல நடிகரின் உடல் கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு!

பிரபல நடிகர் ஒருவர் கடந்த சில நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் அவருடைய உடல் கிணற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

'மாஸ்டர்' படத்தை லீக் செய்தவரை கண்டுபிடிக்க உதவியது இதுதான்!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள மாஸ் திரைப்படமான 'மாஸ்டர்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் நேற்று இரவு திடீரென ஒருசில இணையதளங்களிலும்,

தனுஷின் 'D43' படத்தின் மாஸ் அப்டேட்: டான்ஸ் மாஸ்டரின் டுவீட் வைரல்!

தனுஷ் நடித்து நடித்து முடித்துள்ள 'கர்ணன்' மற்றும் 'ஜகமே தந்திரம்' ஆகிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தனுஷின் 43வது படமான 'D43' படத்தின் படப்பிடிப்பு கடந்த 8ஆம் தேதி

சாமியாரை மிஞ்சி ஆசி வழங்கும் நாய்… வைரல் வீடியோ!!!

இந்து மதம் மட்டுமல்ல, உலகின் அனைத்து மதங்களிலும் ஆசீர்வாதம் வாங்கும் வழக்கம் இருந்து வருகிறது.

உ.பி. முன்னாள் பாஜக எம்.எல்.ஏ.விற்கு குடும்பமே சேர்ந்து அடி… உதை… என்ன நடந்தது?

உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவாக பாஜக சார்பில் இரண்டு முறை வெற்றி பெற்றவர்