நீதிமன்றமா? கருத்துக்கணிப்பு மன்றமா? சுசித்ராவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக நீதிமன்ற டாஸ்க் நடந்து கொண்டிருக்கும் நிலையில் வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி சுசித்ரா, நீதிபதியா? அல்லது கருத்துக்கணிப்பு நடத்தும் நிறுவனத்தின் தலைவரா? என்ற சந்தேகம் பார்வையாளர்களுக்கு வருகிறது.

ஒரு வழக்கில் வாத பிரதிவாதங்கள் நடந்து, வாதத்தின் அடிப்படையிலும் சாட்சிகளின் அடிப்படையிலும் சட்டத்தின் அடிப்படையிலும் தீர்ப்பு வழங்காமல் பார்வையாளர்களை கையை தூக்க வைத்து யாருக்கு அதிகமானோர் கையை தூக்குகிறார்களோ அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கும் சுசித்ராவை கோமாளி நீதிபதி என்றே நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இதுக்கு எதுக்கு விசாரணை, வாதம், முதலிலேயே கையை தூக்க சொல்லி தீர்ப்பு அளித்து விடலாமா? என்பதுதான் அனைவரின் கேள்வியாக உள்ளது

சுசித்ராவுக்கு தனது மனதில் சேஃப் கேம் ஆடுவதாக நினைப்பு. தனது தீர்ப்பால் ஏதாவது பிரச்சனை வந்தால் கருத்துக்கணிப்பின் அடிப்படையில் தான் தீர்ப்பளித்தேன் என்று கூறி தப்பித்து கொள்ளலாம் என்பதுதான் அவரது எண்ணமாக இருக்கலாம். ஆனால் அவரது இந்த தீர்ப்பு மக்கள் மத்தியில் எத்தனை பெரிய அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்பதை அவர் வெளியே வந்த பின்னர் புரிந்து கொள்வார்

ஒருதலை பட்சமாக அவர் தீர்ப்பு வழங்குவது போட்டியாளர்களுக்கே வெட்டவெளிச்சமாக தெரிகிறது. அர்ச்சனா கூட அவரது தீர்ப்பை விமர்சனம் செய்து சுசித்ராவுக்கு எதிராக ஒரு குரூப்பை திரட்ட ஆரம்பித்துவிட்டார். ஏற்கனவே ஒருசில தீர்ப்புகள் குறித்து பல்வேறு விமர்சனங்களை தைரியமாக கூறியுள்ள கமல்ஹாசன், சுசித்ராவின் தீர்ப்பை வைத்து தரமான சம்பவத்தை இவ்வார இறுதியில் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுவதால் பார்வையாளர்களுக்கு செம விருந்து காத்திருப்பதாகவே தெரிகிறது

More News

ஆரவ் திருமணம் குறித்து முதல்முறையாக மனம்திறந்த ஓவியா!

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் டைட்டின் வின்னரான ஆரவ்வுக்கு சமீபத்தில் நடிகை ராஹே என்பவருடன் சிறப்பாக திருமணம் நடந்தது

பள்ளிகள் திறந்த 3 நாட்களில் 150 ஆசிரியர்களுக்கு கொரோனா: அண்டை மாநிலத்தில் ஒரு அதிர்ச்சி!

தமிழகத்தில் ஏழு மாதங்களுக்குப் பின்னர் நவம்பர் 10ஆம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அர்னாப் கோஸ்வாமிக்கு எந்த இந்தியனும் உதவக்கூடாது: தற்கொலை செய்த பொறியாளரின் மகள்!

ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமி இன்று காலை அதிரடியாக மகாராஷ்டிரா போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்பதும் அவரது கைதுக்கு பத்திரிகை துறையினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்

பிரியமானவருக்கு மாளவிகா மோகனன் கொடுத்த முத்தம்: வைரலாகும் புகைப்படம்!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனனுக்கு அந்த படம் ரிலீஸ் ஆகும் முன்னரே வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே.

சம்யுக்தாவை கதறி அழ வைத்த பிக்பாஸ்: செண்டிமெண்ட் ஆரம்பமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களின் குடும்பத்தினரையும் வீடியோ எடுத்து ஒளிபரப்பியும், நேரில் வரவழைத்தும் சென்டிமெண்ட் காட்சிகள் ஆரம்பமாவது உண்டு.