சம்யுக்தாவை கேப்டனாக்கி அரசியல் ஆதாயம்: கமல் குற்றச்சாட்டால் பாலாஜி அதிர்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுவதும் பாலாஜி விளையாடிய விதம், அதுவரை அவர் மீது வைத்திருந்த மரியாதையை குறைத்துவிட்டது என்றே சொல்லலாம். குறிப்பாக சம்யுக்தாவை அவர் கேப்டனாக்கியது அவருடைய பெருந்தன்மையை காட்டுவதாக அனைவரும் நினைத்த நிலையில், அவரை கேப்டனாக்கியதே அவரை காலி பண்ணத்தான் என்றும், சம்யுக்தாவை கேப்டனாக்கியதன் மூலமாக பாலாஜி ஆதாயம் பெற்றதாகவும் சம்யுக்தாவின் பெயருக்கே களங்கம் ஏற்படும் வகையில் செய்ததாகவும் இதுவும் பாலாஜியின் தந்திரங்களில் ஒன்று என்று எண்ணும்படி பல நிகழ்வுகள் நடந்துவிட்டன

இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோ வீடியோவில் இதனை கமல்ஹாசன் சுட்டிக்காட்டினார். ’இந்த வாரம் தலைமை குறித்து கூறுங்கள்’ என சம்யுக்தாவிடம் கமல் கேட்க, அதற்கு அவர், ‘இந்த வாரம் ஏன் தான் நான் கேப்டன் ஆனேன் என்று எனக்கு இருக்கிறது என்று கூறினார். அப்போது கமல்ஹாசன் ’நீங்கள் இன்னொருவரின் கைப்பாவை ஆகிவிட்டீர்கள் என்று இங்கிருந்து பார்க்கும்போது தோன்றுகிறது என்றும், உங்களை கேப்டனாக நியமித்து அரசியல் ஆதாயங்களை எடுத்துக்கொண்டது பாலாஜி என்ற உணர்வு இருக்கிறது என்றும், இது சரியா? என்று கமலஹாசன் கேட்க, ‘அது உண்மைதான்’ என்று சம்யுக்தா கூற, பாலாஜி திருதிருவென முழிக்கும் காட்சிகளுடன் இன்றைய புரோமோ முடிவடைகிறது

மொத்தத்தில் இதுவரை ஹீரோவாக போற்றிப் புகழப்பட்ட பாலாஜி, திடீரென வில்லனாகியதும், கமல்ஹாசன் அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எடுத்து வைப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது