சம்பந்தப்பட்டவங்களே சொன்னா நல்லாயிருக்கும்: பாலா குருப்புக்கு கிடுக்கிப்பிடி போட்ட கமல்!

  • IndiaGlitz, [Sunday,November 15 2020]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடைபெற்ற சண்டைகளில் பாலாஜி-கேப்ரில்லா மற்றும் கேப்ரில்லா-ஷிவானி சண்டைகள் என்பது தெரிந்ததே. இந்த பிரச்சினை குறித்து கமலஹாசன் கேப்ரில்லாவிடம் விசாரித்தபோது ’ஹானஸ்ட் என்றால் என்ன? ஹானஸ்ட்டி என்றால் என்ன? என்று கிண்டலுடன் கேள்வி எழுப்பினார்

அப்போது கேப்ரில்லா ’பாலா திருடியதை நான் கண்ணால் பார்த்தேன். அதனால் பாலாவிடம் ஹானஸ்ட்டா என்கிட்ட சொல் என்று சொன்னபோது பாலாவும் அதற்கு பதிலும் சொல்லி முடித்து விட்டார். ஆனால் வெளியில் போய் விட்டு உள்ளே வந்த பின் மறுபடியும் ’ஏதோ ஹானஸ்ட் என்று கூறினாயே அது என்ன என்று கேட்டு பிரச்சனை செய்தார் என்றபோது குறுக்கிட்ட கமல்ஹாசன், ‘வெளியில் என்ன நடந்தது என்று கேட்டார். அதற்கு கேப்ரில்லா ’வெளியில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது’ என்று கூற ’எனக்கு தெரியுமே’ என்று சிரித்தபடி கமலஹாசன் கூறியதும் ‘என்ன நடந்ததுன்னு சொல்லுங்க சார்’ என்று கேப்ரில்லா கூறியவுடன் அந்த பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்கள் தவிர போட்டியாளர்கள் அனைவரும் கைத்தட்டி சிரித்தனர்

அதன் பின்னர், ’நான் சொல்வதைவிட சம்பந்தப்பட்டவர்களே சொன்னால் நல்லாயிருக்கும்’ என்று கமல் கூறியபோது பாலாஜியின் குரூப்பில் உள்ளவர்களின் முகம் தொங்கிப் போனது. இதனையடுத்து பாலாஜி குரூப்புக்கு கமல்ஹாசன் கிடுக்கிப்பிடி போட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு என்ன பதில் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வருகிறது என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்து கொள்வோம்

More News

ஜூலியின் மணலாடை புகைப்படம் வைரல்!

பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவரான ஜூலி அந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு முன் ஜல்லிக்கட்டு வீராங்கனையாக மக்கள் மத்தியில் புகழ் பெற்றார்.

அந்த வாத்தி ஒரு மாதிரி மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கான்: 'மாஸ்டர்' டீசர்

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது

ராகுல் காந்தி பதட்டமானவர்… ஆசிரியரிடம் நல்ல பெயர் எடுக்கவே விரும்புகிறார்…  இது ஒபாமாவின் விமர்சனம்!!!

முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா சமீபத்தில் ஒரு புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார். A Promised Land எனும் அந்தப்  புத்தகத்தில் பல உலக நாடுகளின் தலைவர்கள் பற்றிய விமர்சனங்கள் இடம் பெற்றிருக்கின்றன

ஆண்டவர் பெயரில் 6,000 கோடி அபேஸ்… கையும் களவுமாக சிக்கிய கும்பல்!!!

வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான ரூபாய்களை நன்கொடையாகப் பெற்று கேரளாவில் உள்ள பிலீவர் சர்ச் எனும் அமைப்பு முறைகேட்டில் ஈடுபட்டதாகப் பரபரப்பு தகவல்

பறவைகளுக்காக… 48 வருடங்களாக பட்டாசு வெடிக்காத கிராமம்… மாவட்ட ஆட்சியர் பாராட்டு!!!

சிவகங்கை மாவட்டத்தில் 17 ஹெக்டேர் பரப்பளவில் ஒரு பறவைகள் சரணாலயம் இருக்கிறது. இந்த சரணாலயத்திற்கு சீசனுக்காக வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான