'நீங்க அதெல்லாம் செய்விங்களா? அனிதாவை கலாய்க்கின்றாரா கமல்!

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் கடலைபருப்பு விவகாரம் மிகப் பெரிய பிரச்சனையாகி விட்டது என்பதும் அந்த விவகாரத்தில் தன் மீது தவறு இருக்கிறது என்பது தெரிந்தும் கேப்டன் பாலாஜி அதனை கையாண்ட விதம் தனக்கு பிடிக்கவில்லை என்பதால் தான் மன்னிப்பு கேட்க முடியாது என்று அனிதா பிடிவாதமாக இருந்தார் என்பதும் தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் கடலை பருப்பு விவகாரத்தில் மனம் புண்படும் வகையில் தான் பேசி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கேப்டனாக இருந்த பாலாஜி இறங்கி வந்தது அவரது மனிதாபிமான தன்மையை காட்டியதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று கடலைப்பருப்பு விவகாரம் குறித்து கமல்ஹாசன் போட்டியாளர்கள் இடம் விசாரிக்கிறார். அப்போது பாலாஜி, தான் செய்தது தவறு என்று தெரிந்தும் அதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளாமல் அசால்ட்டாக இருந்தது எனக்கு பிடிக்கவில்லை என்று கூறினார். அப்போது இது குறித்து விளக்கமளித்த அனிதா ’சாம்பாருக்கு தெரியாமல் கடலைப்பருப்பு ஊறப்போட்டு விட்டதால் அதை வடை அல்லது கூட்டு செய்து கொள்ளலாம் என்று தான் முடிவு செய்ததாகக் கூற அப்போது குறுக்கிட்ட கமல்ஹாசன் ’நீங்கள் அதெல்லாம் செய்வீர்களா’ என்று கலாய்த்தது அனிதாவுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது என்பது அவரது முக பாவனையில் இருந்து தெரிகிறது.

மொத்தத்தில் கமலஹாசன் ஏற்கனவே பலமுறை அனிதாவுக்கு அறிவுரை கூறி இருந்தும் தான் செய்த தவறை அவர் ஒப்புக்கொள்ளாமல் விளையாடி வருகிறார் என்பதும் ஒரு நல்ல போட்டியாளராக இருந்தும் அவரிடம் உள்ள இந்த சிறு குறை தான் அவரை இன்று வெளியேற்ற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.