கமல் கேள்விக்கு பதில் சொல்ல மறுக்கும் ஆரி உள்பட 4 போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை கமல் எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு உடனடியாக பதில் சொல்லும் போட்டியாளர்கள் இன்று அவர் கேட்ட ஒரு கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனமாக இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. அதிலும் ஆரி கூட அமைதியாக இருப்பது அனைவரும் ஆச்சரியத்திற்கு காரணமாக உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய மூன்றாம் புரமோ வீடியோவில் ரம்யா, கேபி மற்றும் ஷிவானி ஆகிய மூவரில் ஒருவர் வெளியேறுகிறார் என்றும் இருவர் அடுத்த வாரத்திற்கு செல்லப் போகிறார் என்றும் கமலஹாசன் கூறுகிறார்.

அப்போது சேவ் செய்யப்பட வேண்டும் என்று யாரை நினைக்கிறீர்கள் என்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற ஆரி, பாலாஜி, சோம் மற்றும் ரியோவிடம் கமல்ஹாசன் கேட்கிறார். கமல்ஹாசனின் கேள்விக்கு ஆரி உள்பட யாரும் பதில் சொல்லாமல் மௌனமாக இருக்கின்றனர்.

இதனை அடுத்து நான் கேள்வி கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனமாக இருக்கின்றீர்கள், அதனால் நானே சொல்லி விடுகிறேன் என்று கூறி வெளியேறும் போட்டியாளரின் பெயரை கூறுவதற்கு தயாராகிறார் கமல். இத்துடன் அந்த வீடியோ முடிவடைகிறது.

More News

திடீர் திருமணத்திற்கு காரணம் என்ன? மனம் திறந்த ஆனந்தி!

பிரபுசாலமன் இயக்கிய 'கயல்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன் பின்னர் 'சண்டிவீரன்' 'பொறியாளன்' 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' 'விசாரணை' 'பரியேறும் பெருமாள்'

சீரியல் நடிகையின் புதிய போட்டோஷூட்! இணையத்தில் வைரல்!

கமலஹாசனின் 'தேவர்மகன்', சேரனின் 'பாண்டவர் பூமி' உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் அதன் பின்னர் 'மொழி' 'சந்தோஷ் சுப்பிரமணியம்' 'வாலிபராஜா' 'மன்னார் வகையறா' 'கஜினிகாந்த்'

பிறந்த நாளில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த பட டைட்டில்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சிவகார்த்திகேயனின் 'கனா' படத்திற்கு பிறகு நாயகிக்கு

ஆஸ்திரேலியா மைதானம் வரை சென்ற ஆரியின் டைட்டில் வின்னர் பதாகை!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 98 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் முதல் மூன்று வாரம் முடிந்த பின்னர் ஆரி தான் டைட்டில் வின்னர் என்பது கிட்டத்தட்ட தெரிந்து விட்டது.

கமல் சொன்னதை கேட்டு உணர்ச்சிவசப்பட்டு கதறியழுத பாலாஜி!

பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 97 நாட்கள் முடிவடைந்து தற்போது 98 ஆவது நாள் இன்று நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு டிக்கெட் டு ஃபினாலே