பிக்பாஸ் தமிழ் சீசன் 4 போட்டியாளர் கைது.. என்ன காரணம்?

  • IndiaGlitz, [Monday,May 13 2024]

பிரபல பாடகரும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான வேல்முருகன் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி பாடகர் வேல்முருகன் என்பதும் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 28 நாட்களில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் மட்டும் இன்றி ’மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை’ ’பிபி ஜோடிகள்’ உள்பட விஜய் டிவியின் ஒரு சில நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டுள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கிய வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு விருகம்பாக்கம் ஆற்காடு சாலை வேம்புலி அம்மன் சிக்னல் அருகே ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு பேரிகார்டு போடப்பட்டு இருந்தது.

அப்போது அந்த வழியாக வந்த பாடகர் வேல்முருகன் பேரிகார்டை நகர்த்திவிட்டு காரில் செல்ல முயன்றார். இதை பார்த்த மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவனத்தின் உதவி மேலாளர் வடிவேலு என்பவர் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதனை அடுத்து வேல்முருகனுக்கும் மெட்ரோ ரயில் உதவி மேலாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்த நிலையில் வேல்முருகன் உதவி மேலாளரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வேல்முருகனை இன்று காலை போலீசார் கைது செய்தனர். ஆபாசமாக பேசுதல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

More News

த்ரிஷாவின் அடுத்த பட படப்பிடிப்பு நிறைவு.. ரிலீஸ் எப்போது?

நடிகை த்ரிஷா தற்போது அஜித் உடன் 'விடாமுயற்சி' மோகன்லாலுடன் 'ராம்' கமல்ஹாசன் உடன் 'தக்லைஃப்' சிரஞ்சீவி உடன் 'விஸ்வாம்பரா' மற்றும் டொவினோ தாமஸ் உடன் 'ஐடெண்டிட்டி'

எதிர்பாராமல் நடந்த கார் விபத்து.. சம்பவ இடத்திலேயே பிரபல சீரியல் நடிகை பலி..!

எதிர்பாராமல் நடந்த கார் விபத்தில் பிரபல சீரியல் நடிகை சம்பவ இடத்திலேயே பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசன் கொடுத்த பெரிய ஆஃபர்.. ஆனாலும் 'பிரேமலு' இயக்குனரின் அதிரடி முடிவு..!

உலக நாயகன் கமல்ஹாசன் தனது நிறுவனத்திற்கு ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை 'பிரேமலு' இயக்குனருக்கு கொடுத்த நிலையில் அதை ஏற்றுக் கொள்ளாமல் அவர் எடுத்த அதிரடி முடிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மிக வேகமாக பரவும் ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து வதந்தி.. அமைதி காக்கும் தம்பதிகள்..!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்யப் போவதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வதந்தி பரவிக் கொண்டிருக்கும்

நடிகர் விஜய் எம்ஜிஆர் போல.. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறும் காரணம்..!

நடிகர் விஜய், எம்ஜிஆர் போல தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்து வருகிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்