மன்மத ராசா.. லூசுப்பெண்ணே: காதல் ஜோடியை வச்சு செய்யும் ஹவுஸ்மேட்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை கொண்டு சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒரு பக்கம் போட்டியாளர்களின் சண்டை சச்சரவு இருந்தபோதிலும் இன்னொரு பக்கம் பாலாஜி-ஷிவானி ரொமான்ஸ் டிராக் தனியாக சென்று கொண்டிருக்கிறது.

பாலாஜி ஷிவானி ரொமான்ஸ் குறித்து மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் என்ன பேசினாலும் அதை இருவரும் கண்டு கொள்வதில்லை என்பதும் இருவரும் கர்மமே கண்ணாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய முதல் புரோமோவில் பாலாஜியும் ஷிவானியும் அருகருகே உட்கார்ந்து ரொமான்ஸாக பேசிக்கொண்டிருக்கும் போது மற்ற போட்டியாளர்கள் அவர்களை பற்றிய பாடலை பாடுகின்றனர். ’மன்மதராசா’ பாடலையும் ’லூசு பெண்ணே’ பாடலையும் பாடி பாலாஜி-ஷிவானி காதலை ஹவுஸ்மேட்ஸ் வச்சு செய்த போதிலும் அதனை கண்டுகொள்ளாமல் இருவரும் தங்கள் ரொமான்ஸை தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

பொதுவாக பிக்பாஸ் சீசன்களில் தோன்று காதல் எல்லாம் சீசன் காதலாக இருந்து வரும் நிலையில் இந்த காதல் மட்டும் புனிதமானதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

More News

குறும்படம்: ஆரியிடம் வசமாக சிக்கிய பாலாஜி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்றவர்களை உசுப்பேத்தி தனது தந்திரத்தை பயன்படுத்தி கடந்த சில நாட்களாக பாலாஜி விளையாடி வருகிறார் என்பது கண்கூட தெரிகிறது. பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்கில்

நீதிமன்றமா? கருத்துக்கணிப்பு மன்றமா? சுசித்ராவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக நீதிமன்ற டாஸ்க் நடந்து கொண்டிருக்கும் நிலையில் வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி சுசித்ரா, நீதிபதியா? அல்லது கருத்துக்கணிப்பு நடத்தும்

ஆரவ் திருமணம் குறித்து முதல்முறையாக மனம்திறந்த ஓவியா!

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் டைட்டின் வின்னரான ஆரவ்வுக்கு சமீபத்தில் நடிகை ராஹே என்பவருடன் சிறப்பாக திருமணம் நடந்தது

பள்ளிகள் திறந்த 3 நாட்களில் 150 ஆசிரியர்களுக்கு கொரோனா: அண்டை மாநிலத்தில் ஒரு அதிர்ச்சி!

தமிழகத்தில் ஏழு மாதங்களுக்குப் பின்னர் நவம்பர் 10ஆம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அர்னாப் கோஸ்வாமிக்கு எந்த இந்தியனும் உதவக்கூடாது: தற்கொலை செய்த பொறியாளரின் மகள்!

ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமி இன்று காலை அதிரடியாக மகாராஷ்டிரா போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்பதும் அவரது கைதுக்கு பத்திரிகை துறையினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்