என்னால தான் எல்லாம்: பாலாஜியை கண்கலங்க வைத்த ஷிவானி தாயார் வருகை!

இன்று பிக்பாஸ் வீட்டிற்கு ஷிவானியின் தாயார் வருகை குறித்த காட்சிகள் முதல் புரமோவில் இருந்தது என்பதையும் ’இங்கே வந்து நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? நீ செய்வது எதுவும் வெளியே தெரியாது என்று நினைத்து கொண்டிருக்கின்றாயா? என்று ஷிவானியிடம் அவரது தாயார் கண்டிப்பது போன்ற காட்சிகள் முதல் புரமோவில் இருந்தது என்பது குறித்து பார்த்தோம்.

இந்த நிலையில் ஷிவானியிடம் ஒரு சில நிமிடங்கள் மிகவும் ஆவேசமாக தனியாக அவரது தாயார் பேசிக்கொண்டிருப்பது மற்ற போட்டியாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக பாலாஜி மிகுந்த வருத்தப்படுகிறார். என்னால் தான் பிரச்சனையோ என்று மிகுந்த வருத்தப்படும் பாலாஜிக்கு ரம்யா ஆறுதல் கூறுகிறார். இதுகுறித்து அவரிடம் ரம்யா கூறியபோது, ‘இருவருக்கும் இடையே நிறைய ரியாக்சன் வெளியே வந்திருக்கும் என்று நினைக்கிறேன். உங்களை பற்றி ஒன்றும் இல்லை என்று ஆறுதல் கூறுகிறார். மேலும் நீ ஏன் உன்னுடைய ஒபினியனை எடுத்து வைக்கவில்லை என்றும் கம்போர்ட் ஜோனில் இருப்பதென்றால் நீ வீட்டிலேயே இருந்திருக்கலாமே என்று மகளை கண்டிக்கிறார் என்று ரம்யா கூறுகிறார்.

ஆனால் பாலாஜி இதனால் சமாதானம் அடையவில்லை. நானும் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டிருக்கின்றேன் என்பதை நினைக்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. என்னிடம் எதுவுமே அவங்க போனது எனக்கு ரொம்ப வருத்தமாக உள்ளது என்று பாலாஜி வருத்தத்துடன் கண் கலங்கும் காட்சி இன்றைய இரண்டாவது புரமோவில் உள்ளது.

இதில் இருந்து ஷிவானியின் தாயார் பாலாஜியை சந்தித்து பேசாமல் ஷிவானியிடம் மட்டும் பேசி சென்றதாக தெரிகிறது.

More News

கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை: ரசிகர்களிடம் ரஜினிகாந்த் மன்னிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்றும் வரும் 31-ஆம் தேதி அவர் அரசியல் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவார்

கொரோனாவில் இருந்து குணமான சூர்யா-கார்த்தி பட நடிகை!

சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை ஒருவர் தான் குணம் ஆகி விட்டதாக தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

விஜய் வைத்த கோரிக்கை என்ன? தமிழக முதல்வர் விளக்கம்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி இன்று மதியம் 12.30 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் தமிழக முதல்வரை தளபதி விஜய் சந்தித்தார்

தமிழகத்தில் ஒருவருக்கு புதியவகை கொரோனா உறுதி… சுகாதாரத்துறை தகவல்!!!

இங்கிலாந்தில் 70% வேகமாகப் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் தமிழகத்தில் ஒருவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அனிதா சம்பத் வீட்டில் ஏற்பட்ட துயர சம்பவம்: பிக்பாஸ் ரசிகர்கள் இரங்கல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வலிமையான போட்டியாளர்களில் ஒருவர் அனிதா சம்பத் என்பதும் அவர் ஆரியிடம் கோபப்பட்ட ஒரே காரணத்திற்காக தான் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார் என்பதும் தெரிந்ததே