முதல்முதலாக கொளுத்தி போட்ட பிக்பாஸ்: காதலால் கடுப்பான பாலாஜி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று அனிதா, சுசித்ரா, ஆரி மற்றும் பாலாஜி ஆகிய நால்வர் நாமினேஷன் செய்யப்பட்ட நிலையில் இதுகுறித்து பிக்பாஸ் முறையான அறிவிப்பை வெளியிடும் இரண்டாவது புரமோ சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இதில் நான்சிங்க்ல போறாங்க, சிடுமூஞ்சி மேக்ஸ், காதல் கண்ணை மறைக்குது என நாமினேஷன் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து பிக்பாஸ் விளக்குகிறார். இதுவரை நாமினேஷன் செய்யப்பட்டதன் காரணத்தை பிக்பாஸ் கூறவில்லை என்ற நிலையில் முதல் முறையாக போட்டியாளர்கள் கூறிய காரணத்தை கூறி, பிக்பாஸே கொளுத்திப் போட்டு உள்ளார் என்பது ஆச்சரியமான ஒன்று ஆகும்.

காதல் கண்ணை மறைக்குது என்ற காரணத்தைக் கேட்டவுடன் கடுப்பான பாலாஜி ’இங்கே யாரும் காதல் பண்ணவில்லை, நான் காதல் செய்வதாக யாராவது கூறினால் அப்புறம் நன்றாக கேட்பேன் என்று கூறினார். மேலும் ஷிவானியை பார்த்து ’உன் மேல் காதல் வந்தால் நானே சொல்கிறேன், ஆனால் காதல் வராது’ என்று கூறியபோது ஷிவானியின் முக ரியாக்சன் பார்வையாளர்களுக்கு சரியான காமெடியாக இருந்தது. மொத்தத்தில் பாலாஜி தனக்கு காதல் இல்லை என்று கூறியும் பிக்பாஸ் உள்பட போட்டியாளர்கள் சிலர் இதுகுறித்து கொளுத்திப் போட்டுள்ளதற்கு பாலாஜியின் ரியாக்சன் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

2,500 ஆண்டு பழமையான மம்மிக்கள்… புதைப்பொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு!!!

பழங்கால அரச வம்சத்தவர்கள் மற்றும் போர் வீரர்கள் ஆகியோர் உயிரிழக்கும்போது அவர்களின் உடல்களை பதப்படுத்தும் வழக்கம் (மம்மி) எகிப்து, சீனா போன்ற நாடுகளில் காணப்பட்டது.

சென்னை முதல் குமரி வரை இன்று கனமழை: தமிழ்நாடு வெதர்மேன்!

கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது

வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் முகத்தில் ஸ்பிரே அடித்துக் கொள்ளை!!!

வேலூர் மாவட்டத்தில் ஒரு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் முகத்தில் ஸ்பிரே அடித்து மர்ம நபர்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர்

டீ குடிக்க சென்ற கேப்பில் அரசு பஸ்ஸை அபேஸ் செய்த வாலிபர்… போதையினால் ஏற்பட்ட பரபரப்பு!!!

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் டிரைவர் இல்லாமல் நின்றிருந்த அரசு பேருந்தை சாலையில் சென்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென ஓட்டிச் சென்ற சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

துபாயில் சஞ்சய்தத்தை சந்தித்த சூப்பர் ஸ்டார்: வைரலாகும் புகைப்படம்!

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் சமீபத்தில் உடல்நலக் கோளாறு காரணமாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்றார் என்பதும் அவர் தற்போது உடல் நலம் தேறி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன