ஆம்பள பையனான்னு கேட்டா யாருக்கு தான் கோபம் வராது: தனியே புலம்பிய பாலா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றும் இன்றும் ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இந்த டாஸ்க்கில் முதல் இடம் பிடித்து நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்று அனைத்து போட்டியாளர்களும் தீவிர முயற்சியில் உள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய இரண்டாம் புரமோவில் பாலா மற்றும் ஆரி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது என்பதும் அந்த வாக்குவாதத்தின் போது ’நீ ஆம்பள பையன் தானே’ என்று ஆரி கேட்டது பாலாஜிக்கு சுர்ரென்று கோபம் ஏறியது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பாலாஜி கேமரா முன் புலம்பி வருகிறார். எவ்வளவு நாகரிகமாக அவரிடம் கேமுக்கு கூப்பிட்டேன் வாங்க விளையாடலாம் என்று. சுற்றி நின்று எதையும் போட்டு விடக்கூடாது, ஓடிப் பிடித்து விளையாடுவது தான் கேம் என்று தெரியும். கமல் அவர்கள் சொன்னதை நான் ஏற்றுக் கொள்கிறேன், நான் என்னுடைய தவறை ஒப்புக்கொள்கிறேன். அதற்காக நான் இந்த வீட்டில் எது பண்ணினாலும் தவறு என்று கூறினால் என்ன அர்த்தம்?

நீ ஆம்பள பையன் தானே’ என்று ஆரி கேட்டது தப்பு என்று இந்த வீட்டில் யாராவது சொன்னார்களா? யாருக்குத்தான் கோபம் வராது ’நீ ஆம்பள பையனா? என்று கேட்டால்? சரி ஓகே நான் கோபப்படவில்லை, இனி மேல் கோபப்பட மாட்டேன்’ என்று தனியாக பாலாஜி புலம்பும் காட்சிகள் இன்றைய மூன்றாம் புரமோவில் உள்ளது. மொத்தத்தில் பாலாஜி-ஆரி சண்டை கடைசி நாள் வரை தீராது என்றே தெரியவருகிறது.

More News

100% இருக்கை அனுமதி என்பது தற்கொலைக்கு சமம்: விஜய், சிம்புவுக்கு ஒரு டாக்டரின் வருத்தமான பதிவு!

கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முழுமையாக நீங்காத நிலையில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதற்கு ஒருசில கண்டனங்கள் எழுகின்றன.

சின்னத்திரை சித்ரா கணவர் ஹேமந்த் மீண்டும் கைது: என்ன காரணம்?

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,

தஞ்சை தரணியில் பிறந்த ராப் பாடகி ஐக்கிபெர்ரி!

தென்னிந்தியாவின் முதல் பெண் ராப் பாடகர் மற்றும் காஸ்மெட்டிக் சர்ஜனான ஐக்கிபெர்ரியின் தமிழ் ராப் பாடல்கள் உலக அளவில் பிரபலமாகியுள்ள நிலையில் அவர் தனது டாக்டர் தொழில் மற்றும் ராப் பாடல் குறித்து

இறப்புச் சடங்கில் ஏற்பட்ட மற்றொரு பயங்கரம்… 23 பேர் பரிதாப பலி!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ஒரு இறப்புச் சடங்கின்போது மயானக்கூரை இடிந்து விழுந்து 23 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

'மாஸ்டர்', 'ஈஸ்வரனை அடுத்து பொங்கல் விருந்தில் இணையும் தனுஷ் படம்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்'திரைப்படம் வரும் 13ம் தேதியும், சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' திரைப்படம் வரும் 14ஆம் தேதியும் பொங்கல் விருந்தாக வெளிவர உள்ளது என்பதும்