'அப்ப தொங்கு' நிஷாவை பழிக்கு பழிவாங்கும் அர்ச்சனா!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்று நடைபெற்ற புதிய மனிதா டாஸ்க்கில் அர்ச்சனாவின் ஆத்திரத்தை கிளறும் வகையில் நிஷா கேள்வி கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனது தந்தை மரணம் குறித்து நிஷா கேட்ட கேள்வியால் உடைந்துபோன அர்ச்சனா, தனது ஆதங்கத்தை கொட்டினார் என்பதும் நிஷா மற்றும் ரியோ மீது அவர் செம கடுப்பில் இருக்கிறார் என்றும் தெரிந்தது.

ஆனால் அதே நேரத்தில் இது எல்லாம் அர்ச்சனாவின் நாடகம் என்றும் குரூப்பிஸமாக தாங்கள் இல்லை என்பதை நிரூபிக்க திட்டம் போட்டு அர்ச்சனை செய்யும் நாடகம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று அர்ச்சனாவை நிஷா பாடாய் படுத்திய நிலையில் இன்று அவருக்கு நிஷாவை டார்ச்சர் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. ’நேற்று என்னை கேட்ட கேள்விக்கு நீங்கள் வருத்தப்படுகிறீர்களா? என கேள்வி கேட்கும் அர்ச்சனா ’நீங்கள் வருத்தப்பட்டதாக கூறுவதை நான் நம்பவில்லை என்றும், முழுக்க முழுக்க நடிப்பு’ என்றும் கூறுகிறார்.

மேலும் ’கேம் என்று வந்துவிட்டால் நான் மிகவும் சீரியஸாக இருப்பேன்’ என்று நிஷாவை எச்சரித்த அர்ச்சனா ’உனக்கு என்னுடைய சோகமும் கோபமும் எப்படி தெரியுமோ, அந்த அளவுக்கு உன்னுடைய கோபமும் சோகமும் எனக்கு தெரியும்’ என்று கூறியதோடு, அப்ப தொங்கு’ என்று கூறுகிறார். அர்ச்சனா நிஷாவை வச்சு செய்வதை ரம்யா பாண்டியன் அருகில் இருந்து வேடிக்கை பார்த்து வருகிறார்.

More News

ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து 300 க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்த பரிதாபம்… மர்மநோய் காரணமா???

ஆந்திர மாநிலத்தில் மர்மநோய் தாக்கத்தால் கடந்த சில தினங்களாக கடும் பதற்றம் நிலவி வருகிறது.

பிறந்த குழந்தைக்கு 27 வயதா??? சாதனை சம்பவத்தால் உறைந்து போன பெற்றோர்கள்!!!

அமெரிக்காவின் டெல்லிஸி மாகாணத்தில் 27 வருடங்களாக உறை பனியில் சேகரித்து வைக்கப்பட்ட கரு முட்டையில் இருந்து ஒரு குழந்தை பிறந்து இருக்கிறது.

பிக்பாஸ் வீட்டில் எதிர்பாராத வைல்ட்கார்ட் எண்ட்ரி? 

பிக்பாஸ் வீட்டில் தனி திறமையுடன் விளையாடிக்கொண்டிருந்த மிகச் சிலரில் ஒருவர் சனம்ஷெட்டி என்பது அனைவரும் அறிந்ததே. அவர் அனைத்து விஷயங்களிலும் மூக்கை நுழைப்பதாக விமர்சனம் செய்யப்பட்டாலும்

இவரை என்னால் பாராட்டால் இருக்க முடியாது: நடராஜன் குறித்து ஆஸ்திரேலிய வீரர்!

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி அதன் பின்னர் ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக யார்க்கர்கள் வீசி புகழ்பெற்ற நடராஜன் தற்போது இந்திய அணியில் தவிர்க்க முடியாத

மகள் மரணத்தில் சந்தேகம்: சித்ராவின் தாய் கண்ணீர் பேட்டி

சின்னத்திரை நடிகை சித்ரா இன்று அதிகாலையில் சென்னை நாசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டல் அறை ஒன்றில் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.