அர்ச்சனா குரூப்பின் ஆதிக்கம்: பாலாஜி சொன்னதை லேட்டாக புரிந்து கொண்ட ஆரி!

அர்ச்சனா குரூப்பின் ஆதிக்கம்: பாலாஜி சொன்னதை லேட்டாக புரிந்து கொண்ட ஆரி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று சனம்ஷெட்டி வெளியேறியது அர்ச்சனா குரூப்புக்கு இன்னொரு வெற்றியாகத்தான் பார்க்கப்படுகிறது என்பதும், அந்த குரூப்பில் உள்ள ஏழு பேர்களும் அப்படியே தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதும் தனித்தன்மையுடன் விளையாடிக்கொண்டிருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கின்றன என்றும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது

இதைத்தான் கடந்த சில வாரங்களாக பாலாஜி குறிப்பிட்டு வருகிறார் என்பதும், ஆனால் அர்ச்சனா குரூப்பினர் மட்டுமின்றி நடுநிலையில் இருக்கும் ஆரி உள்பட ஒருசிலரும் இதனை கண்டுகொள்ளாமல் இருந்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து இன்று ஆரி, அனிதா, பாலாஜி ஆகியோர் கலந்துரையாடுகின்றனர். அர்ச்சனா குருப்பில் உள்ளவர்கள் ஒவ்வொருத்தரையும் காப்பாற்றிக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அவர்கள் எல்லாம் உள்ளே இருக்கின்றார்கள் என்றும், தனித்தன்மையுடன் விளையாடுபவர்கள் வெளியேறிக்கொண்டே இருக்கின்றார்கள் என்றும் ஆரி கூறுகின்றார்.

அப்போது அனிதா ’இது என்ன கேம் என்று எனக்கு புரியவில்லை, ஏன் இந்த கேமை விளையாட வேண்டும்? என்று அவர் சலிப்புடன் கூறுகிறார். ஒவ்வொரு வாரமும் ஒரே குரூப்பில் உள்ள 7 பேர்கள், தனித்தன்மையுடன் விளையாடுபவர்களை வெளியேற்றி கொண்டே இருந்தால் அந்த குரூப் வலிமையாக உள்ளே இருப்பார்கள், இன்று சனம் வெளியேறியதை நாம் அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தால் நாளைக்கு எனக்கும் உனக்கும் அப்படித்தான் நடக்கும் என்று ஆரி கூறுகிறார்

அப்போது பாலாஜி ’நான் இதையேதான் இரண்டு வாரங்களுக்கு முன் கூறினேன். பிக்பாஸ் வீட்டில் இன்பேலன்ஸ் வரப்போகிறது என்று நான் ஏற்கனவே கூறினேன்’ என்று கூறுகிறார் அதை ஆரியும் தற்போது தாமதமாக ஒப்புக்கொள்வதுடன் இன்றைய இரண்டாவது புரமோ முடிவுக்கு வருகிறது

More News

சன் பிக்சர்ஸ் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி? பிரபல இயக்குனருடன் பேச்சுவார்த்தை!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' 'ரஜினிமுருகன்' போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் பொன்ராம். இவர் தற்போது 'எம்ஜிஆர் மகன்'

வேடிக்கை பார்த்த பக்கத்து வீட்டுக்காரருக்கு 55 கோடி ரூபாய் சொத்து… நெகிழ்ச்சி சம்பவம்!!!

எப்படியாவது ஒரு வழியில் அதிர்ஷ்டம் வரலாம். ஆனால் இப்படி கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும் அளவிற்கு அதிர்ஷ்டம் வந்தால் அதை என்னவென்று சொல்வது.

குடிபோதையில் போலீசாரை எட்டி உதைத்த பெண் துணை இயக்குனர்: சென்னையில் பரபரப்பு!

பெண் துணை இயக்குனர் ஒருவர் குடிபோதையில் போலீசாரை எட்டி உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

குஷ்புவை அடுத்து இன்று பாஜகவில் இணையும் கமல்-ரஜினி பட நாயகி!

கடந்த சில மாதங்களாக பாஜகவில் இணையும் திரையுலக நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சமீபத்தில் கமல், ரஜினி உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன்

நடிகர் சங்க அலுவலகத்தில் திடீர் தீ விபத்து: சேதங்கள் எவ்வளவு?

நடிகர் சங்க அலுவலகம் சென்னை தி நகரில் உள்ள ஹபிபுல்லா சாலையில் இயங்கி வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென இன்று அதிகாலை 4 மணிக்கு நடிகர் சங்க அலுவலகத்தில் தீ விபத்து